ஹோமியோபதி மருத்துவம் – Homeopathy Medicine
System
ஹோமியோபதி தத்துவம் – Philosophy of Homeopathy
'எந்த மருந்து எந்த நோயை ஆரோக்கியமான நிலையிலுள்ள
மனிதனிடத்தில் தோற்றுவித்ததோ, அதே மருந்து அந்த நோயுள்ள மனிதனுக்குக்
கொடுத்தால் அந்நோயை தீர்க்கும்' என்ற உண்மையை அறிந்து 1796 இல் "Simila Similibus Curentur" என்ற ஹோமியோபதி தத்துவத்தின் உண்மையை உலகிற்கு
அறிவித்தார் டாக்டர் ஹானிமன். அதாவது "ஒத்தது ஒத்ததைக் குணப்படுத்தும்" முள்ளை
முள்ளால் எடுத்தல் போன்று Likes
are cured by likes என்பது
தான் ஹோமியோபதியின் அடிப்படை தத்துவம்.
ஹோமியோபதியின் தோற்றம் – Origin of Homeopathy
ஹோமியோபதி சிகிச்சை முறை டாக்டர் ஹானிமென் Dr.Christian Fredrick Sauel Hahnumann என்பவரால் 1796 ல் உலகிலுள்ள மக்களின் நலனுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.
டாக்டர் ஹானிமென் ஜெர்மன் நாட்டில் சாதரண குடும்பத்தில் பிறந்தவர். அவர் வாழ்ந்த காலம்
1755 முதல் 1843 ஆகும்.
டாக்டர் ஹானிமன் தனது 12 ஆவது வயதில் 12 மொழிகளில் சரளமாகப் பேசவும் எழுதவும்
கற்றிருந்தார். அவர் ஆங்கில மருத்துவத்தில் MD பட்டம்
பெற்றவர். சில காலம் ஆங்கில மருத்துவம் செய்தார். அதில் அவருக்கு நிறைவு கிடைக்கவில்லை.
அதனால் தன்னுடைய வறுமை நிலையையும் பொருட்படுத்தாது தனது ஆங்கில மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு
மருத்துவ நூல்களை மொழி பெயர்க்கத் தொடங்கினார். அவ்வாறு செய்யும்போது தான் 1790 ல் டாக்டர் கல்லன் Cullen என்பவரின் "மெக்டீரியா மெடிக்கா"
வை மொழி பெயர்த்தார். அதில் சின்கோனா என்ற மருந்து அதன் கசப்புத் தன்மையால் மலேரியாவை
குணப்படுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கூற்று அவரது மனத்திற்கு அதன்
உண்மைத் தன்மையை அறியத் தூண்டுகோலாக இருந்தது.
அவர் சின்கோனாவின் தன்மையை அறிய தானே அதனை உட்கொண்டு அதன் விளைவை
அறிய முற்பட்டார். அவர் அதனைச் சாப்பிட்ட பின்பு அவருக்கு மலேரியா நோய்க்கான அறிகுறிகள்
அவரது உடம்பில் தோன்றின. அதன்பின் அவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் நெருங்கிய
நண்பர்களுக்கும் அம்மருந்தைக் கொடுத்து சோதித்ததில் அவர்களுக்கும் அதே மலேரியா நோய்
இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதன் அடிப்படையில் அவர்
'எந்த மருந்து எந்த நோயை ஆரோக்கியமான நிலையிலுள்ள
மனிதனிடத்தில் தோற்றுவித்ததோ, அதே மருந்து அந்த நோயுள்ள மனிதனுக்குக்
கொடுத்தால் அந்நோயை தீர்க்கும்' என்ற மகத்தான உண்மையை அறிந்து கொண்டார்.
ஹோமியோபதி மருத்துவமுறை – Homeopathy System of Medicines
மனித உடலில் நோய் வந்தால் மனமும் பாதிக்கப்படும். மனம் பாதிக்கப்பட்டால்
உடலும் பாதிக்கப்படும். உதாரணமாக கையில் அடிப்பட்டால் கையில் வலி. பின் மனம் பாதிக்கப்படும்.
சூழ்நிலை காரணமாக மனம் பாதிக்கப்பட்டால் உடல் நலம் கெடும். உடம்பு, மனம் இரண்டும்
சேர்ந்து பாதிக்கப்பட்டால் அது நோய்.
இந்நோயை சரி செய்ய வேண்டுமானால் உடம்பு, மனம் இரண்டையும்
சரிசெய்தால் தான் உடல் நலம் பாதுகாக்கப்படும். உடம்பு மனம் இரண்டையும் சரி செய்ய முதலில்
நோயாளியின் மனநிலைக் கேற்றவாறு நோயறிந்து சரியான மருந்தைத் தேர்வு செய்து நோயாளிக்கு
கொடுத்து மனத்தையும் சரிசெய்து பின் உடல் நோயையும் சரி செய்யப்படுகிறது.
ஹோமியோபதி மருந்தை வீரியப்படுத்தும் முறை – Potentisation
பச்சையாகக் கிடைக்கும் மூலிகைகளை அல்லது மற்ற மருந்துப் பொருட்களை
எடுத்து நன்கு அரைத்து, சாறு பிழிந்து, அந்தச்
சாறு அளவிற்கு ஆல்கஹால் ஊற்றி வைத்து விட வேண்டும். இதற்குத் தாய் திரவம் (Mother tincture) அல்லது அடிப்படை மருந்து என்று பெயர். மருந்து கெட்டுப் போகாமல்
இருப்பதற்காக ஆல்கஹால் கலந்து வைக்கப்படுகிறது.
இந்த அடிப்படை மருந்தை (தாய் திரவத்தை) முறையான கணக்கியல் அடிப்படையில்
அரைத்தல் மற்றும் குலுக்குதல் முறையில் வீரியப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு வீரியப்படுத்துவதன்
மூலம் மருந்துப் பொருட்களின் ஆற்றல் வெளிப்படுகின்றன. மருந்துகள் வீரியப்படுத்தும்
முறையில்தான் அதன் ஆற்றலை வெளிக்கொண்டு வரமுடியும்.
ஹோமியோபதியின் சிறப்பம்சம் – Specialty of Homeopathy
ü மனிதனின் தனித்தன்மைக்கு ஏற்றார் போல்
மருந்து தேர்வு செய்யப்படுகிறது.
ü மருந்துகள் வீரியப்படுத்தப்பட்டு ஆற்றல்
முறையில் பயன்படுத்தப்படுகிறது.
ü பின் விளைவுகள் ஏற்படுவதில்லை.
ü விரைவாக, இதமாக
முழுமையாக நோயைக் குணப்படுத்துகிறது.
ü மனத்தை அடிப்படையாக வைத்து மருந்து கொடுப்பதால்
மனத்தையும் நோயையும் சரிசெய்து மனிதனை மேம்பட்ட மனிதனாக்குகிறது.
ü ஹோமியோபதியில் மருந்துகள் அனைத்தும் ஆரோக்கியமான
மனிதனுக்குக் கொடுத்து மெய்ப்பிக்கப்படுகின்றன என்பது மற்ற மருத்துவத் துறைகளில் இல்லாத
சிறப்பு அம்சமாகும்.
ஹோமியோபதியின் அவசியம் – Why Homeopathy is Important
நோய்களை இயற்கையான முறையில் குணப்படுத்திக் கொள்ள உணவுக் கட்டுப்பாடு
மற்றும் உடற்பயிற்சி என்ற இரு முறைகள் உள்ளன. உடலைப் பிடித்துவிடுதல் / வருடுதல் (Massage) மூலமாகக் கூட உடலில் இரத்த ஓட்டத்தைச் சீரமைக்கலாம். ஆனால், நோய் எதிர்ப்புத்திறன்
குறைவாக இருந்தால் அதனைச் சீரமைத்தல் என்பது சாத்தியமாகாது. இது போன்ற நேரத்தில் ஹோமியோபதி
மருத்துவமுறை நோயினை அடியோடு நீக்க அவசியமாகிறது.