விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Tuesday, July 19, 2011

எய்ட்ஸ் நோயும் ஹோமியோபதி மருத்துவமும்

எய்ட்ஸ் என்னும் உயிர்கொள்ளி நோய் உடம்பிலுள்ள எதிர்ப்பு சக்தியை முற்றிலும் அழித்து கீழ்க்காணும் நோய் அறிகுறிகளை உண்டாக்கி மனிதனை அழிக்கிறது. தகுந்த ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து பாதிப்புகளை குறைக்க முடியும்

எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள்:
எ‌ச்ஐ‌வி பாதிப்புக்குள்ளான பலரிடம் ஆரம்பநிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை.
  • உடல் எடை திடீரென்று குறைதல்.உடலின் எடை திடீரென்று குறைவதுடன் எதிர்ப்பு சக்தியும் குறைந்து கொண்டே போகும்.
  • தொடர் காய்ச்சல். அதுவும் இந்த வைரஸ் மூன்று முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகே தெரிகிறது. 
  • தீவிர எ‌ச்ஐ‌வி பாதிப்பினால், காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, குமட்டல், வயிற்றுப்போக்கு, நெறிகட்டுதல் (அக்குள், கழுத்து கட்டி) போன்ற அறிகுறிகள் தோன்றுகிறது. இந்த அறிகுறிகள் கூட எ‌ச்ஐ‌வி தொற்றிய ஒரு சில நாட்களில் தெரிவதில்லை. மேலும் இது, ஆரம்பநிலையில் வேறு ஏதோ ஒரு வைரஸ் என்று தவறாகவே இனங் காணப்படுகிறது. எனவே ஆரம்ப நிலையில் எ‌ச்ஐ‌வி தொற்றைக் கண்டுபிடிப்பது கடினமாகும். 
  • தொற்று ஏற்பட்ட முதல் மூன்று மாதங்களில் வைரசின் எண்ணிக்கை கணக்கற்றுப் பெருகி, உடலின் பல பாகங்களிலும் பரவுகின்றன. குறிப்பாக மூட்டுக்களில் உள்ள திசுக்கள் இதனால் பாதிக்கின்றன. இந்நிலையில் அத்தொற்று, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவிவிடுகின்றது. 
  • பொதுவாக எ‌ய்‌ட்‌ஸ் நோ‌ய் பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு வெ‌ள்ளை அணு‌க்க‌ள் முக்கியமாக CD 4 வெள்ளை அணுக்கள் அழிந்துபோவதா‌ல் எ‌தி‌ர்‌ப்பு‌ ச‌க்‌தி குறை‌கிறது. இதனா‌ல் எ‌ளிதாக எ‌ந்த நோயு‌ம் எ‌ய்‌ட்‌‌ஸ் நோயா‌ளி‌யை‌த் தா‌க்கு‌கிறது.
  • எ‌ய்‌ட்‌ஸ் நோ‌ய் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் ஏதாவது ஒரு தொ‌ற்று நோயாலோ அ‌ல்லது பெ‌ரிய நோ‌ய்‌த் தா‌க்குதலாலோ‌த் தா‌ன் எ‌ளி‌தி‌ல் மரணமடை‌கிறா‌ர்க‌ள்.
  • எ‌ச்ஐ‌வி தொற்றின் தீவிரமான அறிகுறிகள் தெரிய பல வருடங்கள் ஆகின்றன. பெரியவர்களுக்கு எ‌ச்ஐ‌வி தொற்றிய பிறகு அது வெளித் தெரிவதற்கு 10 வருடங்களுக்கும் மேல் ஆகிறது.
  • எ‌ச்ஐ‌வி தொற்றோடு பிறக்கும் குழந்தைகளுக்கு அது தெரிய குறைந்தது இரண்டு வருடங்கள் ஆகின்றன.
  • எய்ட்ஸ் நோயாளிகள், காசநோய், பூஞ்சான் நோய் தொற்று, சில வகைப்புற்று நோய்கள், நிமோனியா போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். 
தகுந்த ஹோமியோபதி மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உட்கொள்வதால், நோயின் பாதிப்புகளை குறைப்பதோடு நீண்ட ஆயுளையும் பெறலாம்.






















Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்