விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, December 4, 2013

பன்றிக்காய்ச்சல் - இன்புளூயன்சியா எச்1 என் 1










பன்றிக்காய்ச்சல் - இன்புளூயன்சியா எச்1 என் 1
எச்1 என் 1 என்ற வைரசால் தாக்கப்படும்  இன்புளூயன்சியா காய்ச்சல்  பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.

வகைகள்:
இது 3 .பி.சி. என்று 3 வகைப்படுகிறது.
இவை அனைத்தும் வைரஸ்களால் ஏற்படுகிறது.

மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, 3 நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் போன்ற பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் வேகமாகவோ, சிரமப்பட்டோ மூச்சு விடுதல், சுறுசுறுப்பு இல்லாமை, படுக்கையை விட்டு எழுவதில் சிரமம், விளையாடுவதில் ஆர்வம் இன்மை ஆகியவற்றுடன் காணப்பட்டுவதும் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகளாம்.

டைப் பன்றிக்காய்ச்சல்  அறிகுறிகள்:
டைப் வைரஸ் தொற்றினால் லேசான காய்ச்சல் இருக்கும்.
சளி, இருமல் , தலைவலி, வயிற்றுப்போக்கு வாந்தி ஆகியவை இருக்கும்.
சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி இருக்காது.

டைப் பன்றிக்காய்ச்சல் பரிசோதனை
இவர்களுக்கு ஆய்வக பரிசோதனை தேவை இல்லை. வீட்டில் ஓய்வு எடுத்து கொள்ளும்படியும் மற்ற நபர்களிடம் தொடர்பை குறைத்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.

டைப் பன்றிக்காய்ச்சல் சிகிச்சை:
இந்த நோய் வந்தவர்களை தனிமை படுத்தி சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளித்தால் போதும். இவர்களுக்கு டாமிபுளு மாத்திரை கொடுக்கக்கூடாது. ஏன் என்றால் அவ்வாறு அந்த மாத்திரை கொடுத்தால் அது பின்விளைவை ஏற்படுத்தும்.

பி டைப் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள்:
பி டைப் நோயாளிகளுக்கு டைப் நோயாளிகளுக்கு இருந்த அனைத்து அறிகுறிகளுடன் காய்ச்சல் அதிகமாக இருக்கும். தொண்டை வலி அதிகமாக இருக்கும்.

பி டைப் பன்றிக்காய்ச்சல் பரிசோதனை
ஆய்வக பரிசோதனை தேவை இல்லை.

பி டைப் பன்றிக்காய்ச்சல் சிகிச்சை:
பி டைப் நோயாளிகளுக்கு உடனடியாக டாமி புளு மாத்திரை கொடுக்கவேண்டும்.

சி டைப் பன்றிக்காய்ச்சல்  அறிகுறிகள்:
சி டைப் நோயாளிகளுக்கு பி டைப் நோயாளிகளுக்கு இருந்த அறிகுறி தவிர வழக்கத்தை விட அதிக மூச்சுத்திணறல் ஏற்படும். ரத்தத்துடன் கலந்த சளிவரும். நகம் நீல நிறமாக மாறும். சாப்பிட மனம் வராது. பசி எடுக்காது. உடனே

சி டைப் பன்றிக்காய்ச்சல்  ஆய்வக பரிசோதனை
ஆய்வக பரிசோதனை செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

சி டைப் பன்றிக்காய்ச்சல் சிகிச்சை:
பன்றி காய்ச்சல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் டாமி புளு மாத்திரை மருத்துவரின் ஆலோசனை பேரில் சாப்பிட வேண்டும் 'ஒசல்டமிவிர்', 'ஜானமிவிர்' ஆகிய மருந்துகளை அளிக்க வேண்டும். ஒசல்டமிவிர் கிடைக்காவிட்டால், ஜானமிவிர் மருந்தை கொடுக்கலாம்.

இந்த மருந்துகள் மரணத்தை ஏற்படுத்தும் நிமோனியாவை கட்டுப்படுத்துகிறது.

டாமி புளு மாத்திரை பயன்படுத்துவது எப்படி?
பன்றி காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்படாத நபர்களுக்கு இந்த வைரஸ் தடுப்பு மருந்துகளை அளிக்கக்கூடாது. 5 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளுக்கு கூட, அவர்கள் கடுமையாக பாதிக்கப்படாத நிலையில் இந்த மருந்துகளை கொடுக்க வேண்டிய தேவை இல்லை.

பன்றிக் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் டாமிபுளு மாத்திரைகளை, மருத்துவர்களின் அறிவுறுத்தல் இல்லாமல், முறையின்றி உட்கொண்டால் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

"டாமி புளு மருந்துகளை முறையின்றி பயன்படுத்தினால் மருந்தின் சக்தியை எச்1என்1 வைரஸ் தடுத்து நிறுத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். டாமி புளு தனது சக்தியை இழக்க நேரிடும். எனவே மருத்துவர்கள் பரிந்துரைப்படியே மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

எனவே, பொதுமக்கள் யாரும், சாதாரண காய்ச்சலுக்காகவோ, சளிக்காகவோ மருத்துவ பரிசோதனை இன்றி டாமி புளு மாத்திரைகளைப் போட வேண்டாம். உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டால் உரிய மருத்துவரை அணுகி, அவரது பரிந்துரையின் படி சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

மேலும், பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்கள், பயந்தோ, அறியாமையாலோ வீட்டிற்குள் முடங்கி இருக்காமல், தகுந்த மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை பெற்று குணமடையலாம்பன்றிக் காய்ச்சல் நோய்க்கு உடனடியாக உரிய சிகிச்சை மேற்கொண்டால் நிச்சயமாக பூரண குணமடையலாம்.

பன்றிக்காய்ச்சல் பரவாமல் இருக்க
பன்றிக்காய்ச்சலை பரப்பும் வைரஸ் கைகுட்டையில் 12 மணிநேரமும், கைளில் 5 நிமிடமும், குளிர்ந்த தண்ணீரில் 30 நாட்களும் உயிர்வாழக்கூடியது . மேலும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க இருமும்போதும், தும்மும் போதும் மற்றவர்களுக்கு குறைந்தது 4 அடி இடைவெளி இருக்க வேண்டும்

ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நாமும் நம்மை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தும்மியப் பிறகோ, இருமியப் பிறகோ நமது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். வெளியில் சென்றுவிட்டு வந்ததும் கை, கால்களை நன்கு கழுவி, பின்னர் முகத்தையும் கழுவ வேண்டும்.
சுகாதாரமாக வாழுங்கள்

தினமும் குறைந்தபட்சம் ஒரு வேளை சுத்தமான நீரில் குளியுங்கள். நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பைக் கொண்டு அடிக்கடி கைகளை கழுவுங்கள். குழாய் தண்ணீரில் குறைந்த பட்சம் 15 வினாடிகள் கைகளை அலசுங்கள்.

வெளியில் சென்று விட்டு வந்ததும் கை, கால், முகம், கழுத்துப் பகுதிகளை சுத்தமான தண்ணீரால் நன்கு கழுவுங்கள்.

இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு உறக்கம் அவசியம்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு தானிய வகைகள், பசுமையான காய்கறிகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுங்கள்.

மது அருந்த வேண்டாம்

மது அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் பன்றி காய்ச்சல் போன்ற நோய்க்கிருமிகள் உடலுக்குள் எளிதாக ஊடுருவும் என்பதால் மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.

மிதமான உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால், தினசரி 30 முதல் 40 நிமிடம் வேகமான நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருங்கள்.
இருமுவதன் மூலமும், தும்முவதன் மூலமும் பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.

தேவையில்லாமல் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு  செல்வதை தவிருங்கள்

தேவை இல்லாமல் வெளியில் செல்வதையும், கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிருங்கள். கண்கள், மூக்கு, வாய் மூலம் நோய்க்கிருமிகள் உடலுக்குள் செல்லும் என்பதால் அவற்றை தொடுவதையும் தவிருங்கள்.
வேறு எந்தக் காரணத்திற்காகவும் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து வராதீர்கள்.

குழந்தைகளை வெளியில் கொண்டு செல்வதைத் தவிருங்கள்.
வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும் குழந்தைகளைத் தூக்காதீர்கள். உடனடியாக உடலை சுத்தம் செய்த பின்னரே அடுத்த வேலையைத் துவக்குங்கள்.

ஆரோக்கியமாக இருப்போம், வருமுன் காப்போம்








==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்