விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் - உழவு


1031.   சுழன்றும்ஏர்ப்    பின்னது   உலகம்    அதனால் 
உழந்தும்   உழவே    தலை.

1032.   உழுவார்   உலகத்தார்க்கு   ஆணிஅஃ  தாற்றாது 
எழுவாரை எல்லாம்   பொறுத்து.

1033.   உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்     றெல்லாம்
தொழுதுண்டு    பின்செல்   பவர்.

1034.   பலகுடை  நீழலும்    தங்குடைக்கீழ்க்  காண்பர்   
அலகுடை  நீழ   லவர்.

1035.   இரவார்    இரப்பார்க்கொன்று     ஈவர் கரவாது   
கைசெய்தூண்    மாலை    யவர்.

1036.   உழவினார் கைம்மடங்கின்   இல்லை   விழைவதூஉம்  
விட்டேம்என்    பார்க்கும்   நிலை.

1037.   தொடிப்புழுதி    கஃசா உணக்கின் பிடித்தெருவும்  
வேண்டாது சாலப்     படும்.

1038.   ஏரினும்    நன்றால்   எருவிடுதல்     கட்டபின்  
நீரினும்    நன்றதன்  காப்பு.

1039.   செல்லான் கிழவன்    இருப்பின்  நிலம்புலந்து    
இல்லாளின்     ஊடி  விடும்.

1040.   இலமென்று அசைஇ    இருப்பாரைக்     காணின்  
நிலமென்னும்    நல்லாள்   நகும்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்