விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -பேதைமை


831.     பேதைமை என்பதொன்று    யாதெனின் ஏதங்கொண்டு  
ஊதியம்   போக விடல்.

832.     பேதைமையுள்   எல்லாம்   பேதைமை காதன்மை
கையல்ல  தன்கட்    செயல்.

833.     நாணாமை நாடாமை  நாரின்மை யாதொன்றும்   
பேணாமை பேதை     தொழில்

834.     ஓதி  உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்    
பேதையின் பேதையார் இல்.

835.     ஒருமைச்  செயலாற்றும்    பேதை     எழுமையும்
தான்புக்    கழுந்தும்   அளறு.

836.     பொய்படும் ஒன்றோ   புனைபூணும்     கையறியாப்    
பேதை     வினைமேற்     கொளின்.

837.     ஏதிலார்    ஆரத் தமர்பசிப்பர் பேதை    
பெருஞ்செல்வம்  உற்றக்    கடை.

838.     மையல்    ஒருவன்   களித்தற்றால்    பேதைதன்
கையொன்று     உடைமை  பெறின்.

839.     பெரிதினிது பேதையார் கேண்மை  பிரிவின்கண்    
பீழை தருவதொன்     றில்.

840.     கழாஅக்கால்     பள்ளியுள்  வைத்தற்றால்   சான்றோர் 
குழாஅத்துப்     பேதை     புகல்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்