விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - அறன்வலியுறுத்தல்

31.       சிறப்புஈனும்     செல்வமும் ஈனும்     அறத்தினூஉங்கு
ஆக்கம்    எவனோ   உயிர்க்கு.

32.       அறத்தினூஉங்கு ஆக்கமும்  இல்லை   அதனை  
மறத்தலின் ஊங்கில்லை     கேடு.

33.       ஒல்லும்   வகையான் அறவினை ஓவாதே  
செல்லும்வாய்   எல்லாஞ்  செயல்.

34.       மனத்துக்கண்    மாசிலன்   ஆதல்     அனைத்தறன்   
ஆகுல     நீர   பிற.

35.       அழுக்காறு அவாவெகுளி    இன்னாச்சொல்   நான்கும்  
இழுக்கா   இயன்றது  அறம்.

36.       அன்றறிவாம்    என்னாது   அறஞ்செய்க     மற்றது   
பொன்றுங்கால்   பொன்றாத் துணை.

37.       அறத்தாறு இதுவென  வேண்டா  சிவிகை  
பொறுத்தானோடு ஊர்ந்தான்  இடை.

38.       வீழ்நாள்   படாஅமை நன்றாற்றின்     அஃதொருவன்  
வாழ்நாள்  வழியடைக்கும்  கல்.

39.       அறத்தான் வருவதே  இன்பம்    மற்றெல்லாம்   
புறத்த     புகழும்    இல.

40.       செயற்பால தோரும்   அறனே    ஒருவற்கு 
உயற்பால  தோரும்   பழி.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்