விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் - இரவு


1051.   இரக்க     இரத்தக்கார்க்    காணின்   கரப்பின்  
அவர்பழி   தம்பழி     அன்று.

1052.   இன்பம்    ஒருவற்கு  இரத்தல்   இரந்தவை
துன்பம்    உறாஅ    வரின்.

1053.   கரப்பிலா   நெஞ்சின்  கடனறிவார்     முன்நின்று
இரப்புமோ  ரேஎர் உடைத்து.

1054.   இரத்தலும் ஈதலே     போலும்   கரத்தல்   
கனவிலும் தேற்றாதார் மாட்டு.

1055.   கரப்பிலார்  வையகத்து உண்மையால்    கண்ணின்று    
இரப்பவர்   மேற்கொள் வது.

1056.   கரப்பிடும்பை    யில்லாரைக்     காணின்   நிரப்பிடும்பை   
எல்லாம்   ஒருங்கு   கெடும்.

1057.   இகழ்ந்தெள்ளாது ஈவாரைக்  காணின்   மகிழ்ந்துள்ளம்  
உள்ளுள்   உவப்பது   உடைத்து.

1058.   இரப்பாரை இல்லாயின்     ஈர்ங்கண்மா     ஞாலம்   
மரப்பாவை சென்றுவந் தற்று.

1059.   ஈவார்கண் என்னுண்டாம்    தோற்றம்  இரந்துகோள்    
மேவார்    இலாஅக்   கடை.

1060.   இரப்பான்  வெகுளாமை     வேண்டும்  நிரப்பிடும்பை   
தானேயும்  சாலும்     கரி.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்