விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - மெய்யுணர்தல்


351.     பொருளல்ல     வற்றைப்  பொருளென்று    உணரும்  
மருளானாம்     மாணாப்   பிறப்பு.

352.     இருள்நீங்கி இன்பம்    பயக்கும்   மருள்நீங்கி
மாசறு     காட்சி     யவர்க்கு.

353.     ஐயத்தின்  நீங்கித்     தெளிந்தார்க்கு   வையத்தின்    
வானம்    நணிய     துடைத்து.

354.     ஐயுணர்வு  எய்தியக்   கண்ணும்  பயமின்றே
மெய்யுணர்வு    இல்லா    தவர்க்கு.

355.     எப்பொருள் எத்தன்மைத்     தாயினும்  அப்பொருள்
மெய்ப்பொருள்   காண்பது   அறிவு.

356.     கற்றீண்டு  மெய்ப்பொருள்   கண்டார்   தலைப்படுவர்   
மற்றீண்டு  வாரா நெறி.

357.     ஓர்த்துள்ளம்     உள்ளது    உணரின்   ஒருதலையாப்  
பேர்த்துள்ள வேண்டா  பிறப்பு.

358.     பிறப்பென்னும்   பேதைமை நீங்கச்     சிறப்பென்னும்  
செம்பொருள்     காண்பது   அறிவு.

359.     சார்புணர்ந்து     சார்பு கெடஒழுகின்    மற்றழித்துச்    
சார்தரா    சார்தரு    நோய்.

360.     காமம்     வெகுளி   மயக்கம்   இவ்முன்றன்   
நாமம்     கெடக்கெடும்    நோய்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்