விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

101.     செய்யாமல் செய்த     உதவிக்கு  வையகமும்    
வானகமும் ஆற்றல்   அரிது.

102.     காலத்தி   னாற்செய்த நன்றி சிறிதெனினும்  
ஞாலத்தின் மாணப்    பெரிது.

103.     பயன்தூக்கார்    செய்த     உதவி     நயன்தூக்கின்   
நன்மை    கடலின்    பெரிது.

104.     தினைத்துணை  நன்றி செயினும்  பனைத்துணையாக்   
கொள்வர்  பயன்தெரி  வார்.

105.     உதவி     வரைத்தன்று    உதவி     உதவி    
செயப்பட்டார்    சால்பின்   வரைத்து.

106.     மறவற்க   மாசற்றார்  கேண்மை  துறவற்க  
துன்பத்துள் துப்பாயார்  நட்பு.

107.     எழுமை    எழுபிறப்பும்     உள்ளுவர்  தங்கண்   
விழுமந்   துடைத்தவர்     நட்பு.

108.     நன்றி மறப்பது   நன்றன்று  நன்றல்லது
அன்றே    மறப்பது   நன்று.

109.     கொன்றன்ன     இன்னா    செயினும்  அவர்செய்த
ஒன்றுநன்று     உள்ளக்    கெடும்.

110.     எந்நன்றி   கொன்றார்க்கும்  உய்வுண்டாம்    உய்வில்லை   
செய்ந்நன்றி     கொன்ற   மகற்கு.



Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்