விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - காமத்துப்பால் - தகையணங்குறுத்தல்


1081.   அணங்குகொல்  ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல்     மாலும்என் நெஞ்சு.

1082.   நோக்கினாள்     நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு    
தானைக்கொண்  டன்ன     துடைத்து.

1083.   பண்டறியேன்    கூற்றென்  பதனை    இனியறிந்தேன் 
பெண்டகையால் பேரமர்க்   கட்டு.

1084.   கண்டார்   உயிருண்ணும்   தோற்றத்தால்   பெண்டகைப்    
பேதைக்கு  அமர்த்தன கண்.

1085.   கூற்றமோ கண்ணோ  பிணையோ மடவரல்  
நோக்கமிம் மூன்றும்   உடைத்து.

1086.   கொடும்புருவம்  கோடா    மறைப்பின் நடுங்கஞர்
செய்யல   மன்இவள்  கண்.

1087.   கடாஅக்    களிற்றின்மேற்   கட்படாம்  மாதர்
படாஅ     முலைமேல்     துகில்.

1088.   ஒண்ணுதற் கோஒ     உடைந்ததே     ஞாட்பினுள்    
நண்ணாரும்     உட்குமென் பீடு.

1089.   பிணையேர் மடநோக்கும்     நாணும்    உடையாட்கு    
அணியெவனோ  ஏதில தந்து.

1090.   உண்டார்கண்    அல்லது   அடுநறாக்  காமம்போல்    
கண்டார்   மகிழ்செய்தல்    இன்று.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்