விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -அறிவுடைமை


421.     அறிவற்றங்     காக்குங்   கருவி     செறுவார்க்கும்  
உள்ளழிக்க லாகா     அரண்.

422.     சென்ற     இடத்தால்  செலவிடா தீதொரீஇ 
நன்றின்பால்     உய்ப்ப     தறிவு.

423.     எப்பொருள் யார்யார்வாய்க்   கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள்   காண்ப     தறிவு.

424.     எண்பொருள     வாகச்     செலச்சொல்லித் தான்பிறர்வாய்  
நுண்பொருள்     காண்ப     தறிவு.

425.     உலகம்    தழீஇய    தொட்பம்   மலர்தலும்
கூம்பலும்  இல்ல     தறிவு.

426.     எவ்வ துறைவது  உலகம்    உலகத்தோடு   
அவ்வ     துறைவ   தறிவு.

427.     அறிவுடையார்   ஆவ தறிவார்   அறிவிலார்
அஃதறி    கல்லா     தவர்.

428.     அஞ்சுவ   தஞ்சாமை பேதைமை அஞ்சுவது 
அஞ்சல்    அறிவார்   தொழில்.

429.     எதிரதாக்   காக்கும்    அறிவினார்க்     கில்லை  
அதிர வருவதோர் நோய்.

430.     அறிவுடையார்   எல்லா     முடையார் அறிவிலார்
என்னுடைய     ரேனும்    இலர்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்