விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -கல்வி



391.     கற்க கசடறக்    கற்பவை   கற்றபின்  
நிற்க அதற்குத்   தக.

392.     எண்ணென்ப     ஏனை     எழுத்தென்ப     இவ்விரண்டும்  
கண்ணென்ப     வாழும்    உயிர்க்கு.

393.     கண்ணுடையர்   என்பவர்   கற்றோர்   முகத்திரண்டு   
புண்ணுடையர்   கல்லா     தவர்.

394.     உவப்பத்   தலைக்கூடி உள்ளப்    பிரிதல்   
அனைத்தே புலவர்     தொழில்.

395.     உடையார்முன்   இல்லார்போல்   ஏக்கற்றுங் கற்றார்   
கடையரே  கல்லா     தவர்.

396.     தொட்டனைத்    தூறும்     மணற்கேணி     மாந்தர்க்குக்    
கற்றனைத் தூறும்     அறிவு.

397.     யாதானும்  நாடாமால் ஊராமால்  என்னொருவன்  
சாந்துணையுங்   கல்லாத   வாறு.

398.     ஒருமைக்கண்    தான்கற்ற  கல்வி     ஒருவற்கு 
எழுமையும் ஏமாப் புடைத்து.

399.     தாமின்    புறுவது    உலகின்   புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்   தார்.

400.     கேடில்     விழுச்செல்வம்  கல்வி     யொருவற்கு    
மாடல்ல   மற்றை    யவை.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்