விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -அவையறிதல்


711.     அவையறிநது    ஆராய்ந்து  சொல்லுக  சொல்லின்
தொகையறிந்த   தூய்மை   யவர்.

712.     இடைதெரிந்து   நன்குணர்ந்து    சொல்லுக  சொல்லின்
நடைதெரிந்த    நன்மை    யவர்.

713.     அவையறியார்   சொல்லல்மேற்  கொள்பவர் சொல்லின்
வகையறியார்    வல்லதூஉம்     இல்.

714.     ஒளியார்முன்    ஒள்ளிய   ராதல்     வெளியார்முன் 
வான்சுதை வண்ணம்  கொளல்.

715.     நன்றென்ற வற்றுள்ளும்     நன்றே     முதுவருள்
முந்து     கிளவாச்   செறிவு.

716.     ஆற்றின்   நிலைதளர்ந்     தற்றே     வியன்புலம்    
ஏற்றுணர்வார்    முன்னர்   இழுக்கு.

717.     கற்றறிந்தார்     கல்வி     விளங்கும் கசடறச்   
சொல்தெரிதல்   வல்லார்   அகத்து.

718.     உணர்வ   துடையார்முன்   சொல்லல் வளர்வதன்
பாத்தியுள்  நீர்சொரிந்  தற்று.

719.     புல்லவையுள்    பொச்சாந்தும்    சொல்லற்க நல்லவையுள்   
நன்குசலச் சொல்லு   வார்.

720.     அங்கணத்துள்   உக்க அமிழ்தற்றால்   தங்கணத்தார்   
அல்லார்முன்    கோட்டி    கொளல்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்