விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 11, 2011

இரத்த பெருக்கு (அ) இரத்த இழப்பு -முதலுதவி





இரத்தப்பெருக்கு  என்பது உடலின் உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு இரத்த சுற்றோட்டத்தொகுதியில் இரத்த குழாய்களுக்கு வெளியே இரத்தம் வெளியேறுவது ஆகும். இது எளிமையாக இரத்தப்பெருக்கு எனவும் அழைக்கப்படுகிறது. உடல்நலமுள்ள அல்லது ஆரோக்கியமான உடல்நிலை கொண்ட ஒருவர் எந்த மருத்துவ பிரச்சனைகளுமின்றி, தன்னுடலிலிருந்து 10-15% இரத்தத்தை இழக்கலாம் எனவும், 8-10% இரத்தத்தை இரத்த தானம் வழங்கலில் (blood donation) இழக்க முடியும் எனவும் அறியப்பட்டுள்ளது.


இரத்தப்பெருக்கின் வகைகள்
இரத்த பெருக்கு இரண்டு வகைப்படும்.


உட்புற இரத்த பெருக்கு
உடற்கலங்கள் பாதிக்கப்பட்டு உடலிற்கு உள்ளே இரத்த பெருக்கு ஏற்படுமாயின் அது உட்புற இரத்த பெருக்கு எனப்படும். இதனை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளல் கடினம். உட்புற இரத்த பெருக்கில் பின்வரும் மாற்றங்கள் நிகழும்.
  1. வீக்கம்
  2. நிறம் மாறுதல்
  3. வலி்
  4. இடம் சூடாதல்

வெளிப்புற இரத்த பெருக்கு

உடற்கலங்கள் பாதிக்கப்பட்டு உடலிற்கு வெளியாக இரத்தம் வெளியேறுமாயின் அது வெளிப்புற இரத்த பெருக்கு எனப்படும். இவ்வகையான இரத்த பெருக்கு, வாய், மூக்கு, காது,யோனி, குதம் போன்ற இயற்கையாக அமைந்த துவாரங்கள் மூலமாகவோ, அல்லது தோலில் ஏற்படும் பிளவுகள் காயங்கள் மூலமாகவோ ஏற்படலாம். வெளிப்புற இரத்த பெருக்கை நேரடியாகப் பார்த்து அறிந்து கொள்ள முடிவதால், இரத்தம் வெளியேறும் அளவைப் பார்த்து மதிப்பீடு செய்து, தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

முதலுதவி
இரத்த பெருக்கில், இரத்தம் வெளியேறும் அளவு, இரத்த பெருக்கு ஏற்பட்ட இடம் போன்ற நிலைகளைப் பொறுத்து முதலுதவி முறைகளும் வேறுபடும்.
  • உடலில் பொருட்கள் ஏதேனும் குத்திய நிலையில் இருப்பின், அதிலிருந்து இரத்த பெருக்கு ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க, அதை அகற்றாமல் மருத்துவமனைக்கு  செல்ல வேண்டும்.
  • வெளிப்புற இரத்த பெருக்கு எளிதாக அடையாளம் காணப்படக் கூடியது. காயமேற்பட்ட இடத்தை உயர்த்தி வைத்திருத்தல் வேண்டும்.
  • வெளிப்புற இரத்த பெருக்கு அதிகளவில் இருப்பின், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
  • உட்புற இரத்த பெருக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், நோயாளி சுயநினைவுடன் இருந்தால், இரத்த பெருக்கின் விளைவால், மயக்கத்தில் நோயாளி கீழே விழுந்துவிடாமல் தடுக்க, கிடையாகப் படுக்கவைத்து மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
  • நோயாளி சுயநினைவு இல்லாமல் இருப்பினும், சுவாசிப்பாராயின் முதலில் சுவாசம் தடைப்படாமல் மீளுயிர்ப்பு நிலைக்கு நோயாளியைக் கொண்டுவருதல் வேண்டும். அதன் பின்னரேயே இரத்த பெருக்கைக் கட்டுப்படுத்தல் வேண்டும்.
  • நோயாளி சுயநினைவு இல்லாமல், சுவாசமும் இல்லாமல் இருந்தால் முதல் சுவாசம் திரும்பும் வரை மீளுயிர்ப்புச் சுவாசம் வழங்கவேண்டும். அதன் பின்னரேயே இரத்த பெருக்கைக் கட்டுப்படுத்த வேண்டும்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்