நுரையீரல்
மேல் மூச்சு வாங்குதல் :
தூதுவளை உண்பதால் குணமாகும்.
நெஞ்சு சளி குணமாக:
வெற்றிலை சாறு, இஞ்சி சாறு கண்ணாடி டம்ளரில் வைத்து தெளிந்த நீரை மட்டும் எடுத்து தேன் சேர்த்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குறைய:
முசுமசுக்கை இலையை அரிந்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும்.
ஆஸ்துமா குணமாக:
1. வில்வ இலை பொடி தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டு வர ஆஸ்துமா நோய் குணமாகும்.
2. கண்டங்கத்தரி பொடி 100 கிராம், சுருள்பட்டை பொடி 100 கிராம், திப்பிலி பொடி 50
கிராம், பெருங்காயம் 10 கிராம் ஒன்றாக கலந்து பாட்டிலில் வைக்கவும், இதை காலை,
மாலை ½ கரண்டி வெந்நீர் அல்லது பாலில் சாப்பிட்டு வர ஆஸ்துமா தலைவலி, சளி, தும்மல் குணமாகும்.
இதயம்
1. இதயத்திற்கு சூரியகாந்தி எண்ணெயைவிட தவிட்டு எண்ணெய் மிகவும் நல்லது.
2. வாழைப்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பக்கவாதம், மாரடைப்பு, இதயக்கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். (நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது!)
3. சாப்பாட்டில் தினமும் கடலைப்பருப்பு சேர்த்துக் கொள்வது நல்லது. ஒரு கைப்பிடி அளவாவது வேக வைத்து சாப்பிடுங்கள். இதயத்தை வலுவாக்க மிகவும் உதவி செய்வது கடலைப் பருப்பு. இதய நோயாளிகள் விடாமல் சாப்பிட்டு வந்தால் இதயத்திற்க்கு நல்லது.
==--==