காது, மூக்கு, தொண்டை
இருமல் குணமாக:
அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும்.
வறட்டு இருமல் குணமாக:
கருவேலமரக்கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.
இளைப்பு, இருமல் குணமாக:
விஷ்ணுகிராந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும்.
சுவாசக்குழாய் அலர்ஜி குணமாக:
குங்கும பூவுடன், தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாட்கள் தினசரி 2 வேளை உட்கொள்ள குணமாகும்.
இருமல் தொண்டைவலி குணமாக:
மிளகு, திப்பிலி, சுக்கு சம அளவு, பொடி 2 கிராம் தேனில் கலந்து 3 வேளை சாப்பிட இருமல், தொண்டைவலி குணமாகும்.
வரட்டு இருமல் குணமாக:
கடுக்காய் தோலை சுட்டு ஒரு துண்டை வாயில் அடக்கினால் வறட்டு இருமல் குணமாகும்.
மூச்சுத்திணறல்:
தேள் கொடுக்குச் செடியின் காயை நசுக்கி துளசி இலையைச் சேர்த்து கஷாயமாக்கி தினம் ஒரு வேளை சாப்பிட்டு வர மூச்சுத் திணறல் குணமாகும்.
இருமல் குணமாக:
காய்ச்சிய பசுவின் பாலில் சிறிதளவு மிளகுத் தூளைப் போட்டுக் கலந்து குடித்தால் இருமல் நிற்கும்.
மூக்கில் நீர்வடிதல் குணமாக:
ஒரு டம்ளர் அகத்தி இலை சாறு, ஒரு டம்ளர் பசும்பால் சேர்த்து சிவக்க் காய்ச்சி இறக்கி வடிக்கட்டி ஆறவைத்து வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து வர குணமாகும்.
தொடர் இருமல் குணமாக:
கண்டங்கத்திரி வேரை அரைத்து வெள்ளாட்டுப்பாலில் காய்ச்சி கொடுக்க குணமாகும்.
மூக்கு சம்பந்தமான நோய் குணமாக:
நாயுருவி செடி விதைகளை பொடி செய்து உட்கொண்டால் குணமாகும்.
மூக்கில் இரத்தம் வடிதல் குணமாக:
மாதுளம் பழச்சாறு, அருகம்புல் சாறு சம அளவு கலந்து 30 மி.லி. 3 வேளை சாப்பிட குணமாகும்.
இருமல் நிற்க :
முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.
வரட்டு இருமல் குணமாக:
மஞ்சள் துண்டுகளை சுண்ணாம்புத் தெளிவு நீரில் ஊறவைத்து உலர்த்தி இடித்துத் தூள் செய்து தேக்கரண்டி பாலில் கலந்து கொடுக்க குணமாகும்.
மூக்கடைப்பு நீங்க:
ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கிவிடும்.
கண்டங்கத்தரி வேர் 40 கிராம், ஆடாதொடை வேர் 40 கிராம், அரிசித் திப்பிலி 50 கிராம், சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக்கி 100. மி.லி. வீதம் தினம் 4 வேளை குடிக்கத் தீரும்.
மூக்கில் இரத்தம் வடிதல் குணமாக :
மாதுளம் பழச்சாறு, அருகம்புல்சாறு சம அளவு கலந்து 30 மி.லி. 3 வேளை சாப்பிட குணமாகும்.
மூக்கில் உள்ள புண் ஆற:
மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்ப எண்ணெய் கலந்து மை அரைத்து புண்மீது தடவ குணமாகும்.
மூக்குசம்பந்தமான நோய் குணமாக:
நாயுருவி செடி விதைகளை பொடி செய்து உண்டால் மூக்கு சம்பந்தமான நோய் குணமாகும்.
குரல் மாற்றத்தை சரி செய்ய:
கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிக் கொள்ளவேண்டும். ஊறிய உமிழ்நீரை முழுங்கிவிடவும்.
தொண்டைப்புண் ஆற:
வேப்பம் பூவை கொதி நீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டைப்புண் ஆறும்.
தொண்டை நோய்:
மாதுளம் பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி அதனுடன் நெய்யும் கலந்து சாப்பிட தொண்டை நோய் அகலும்.
காசம் இறைப்பு நீங்க:
கரிசலாங்கண்ணி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.
காசநோய் குணமாக:
செம்பருத்தி பூவை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்.
காது குத்தல் சரியாக:-
ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் மிளகளவு பெருங்காயத்தைப் பொரித்து காயத்தை நீக்கிவிட்டு இளஞ்சூட்டில் சில துளிகள் காதில் விட சரியாகும்.
காதில் சீழ்வடிதல் குணமாக:-
மாதுளம் பழச்சாற்றை லேசாகச் சூடுபடுத்தி சில துளிகள் காதில் விட குணம் தெரியும்.
காது குடைச்சல் குணமாக:-
குப்பைமேனி, கோழியவரை இலைகளைச்சாறு பிழிந்து சம அளவு எடுத்துக் கலந்து காதில் சில துளிகள் விட்டால் குணமாகும்.
மூக்குப்புண் ஆற:-
சுட்டுக் கரியாக்கிய மஞ்சளைப் பொடி செய்து வேப்பெண்ணெயில் குழைத்துத் தடவப்புண் ஆறும்
மூக்கில் நீர் வடிதல்:-
வேப்பிலையையும், ஓமத்தையும் விழுதாக அரைத்து நெற்றி கழுத்து பிடரியில் பூசிக் கொண்டால் மூக்கில் நீர் வடிதல் நிற்கும்.
தொண்டைக் கட்டு சரியாக:-
உலர்ந்த மாவிலையைச் சுட்டு அந்தக் கரியை நீரில்போட்டுக் குடிக்க சரியாகும்.
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
தொண்டை கரகரப்பு
1. சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
2. தொண்டை கரகரப்புடன் கூடிய வறட்டு இருமலுக்கு, ஒரு டம்ளர் பாலில், ஒரு ஸ்பூன் தேன், மஞ்சள்தூள், மிளகு பொடி ஆகியவற்றை கலந்து அருந்தினால் உடனே குணமாகும். 3. நிலவேம்பு கஷாயத்தில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்க கரப்பான் தீரும்.
தொண்டை எரிச்சல் சரியாக:
ஒரு தேக்கரண்டி வினீகரை ஒரு தம்ளர் நீரில் கலந்து கொள்ள வேண்டும். அந்நீரை தொண்டை வரை ஊற்றிக் கொப்பளித்துவிட்டு பிறகு குடித்தால் தொண்டை சரியாகும். அல்லது கொஞ்சம் உப்பு எடுத்துக் கொண்டு ஒரு டம்ளர் வெதுவெதுப் பான நீரில் கலந்து தொண்டைவரை ஊற்றிக் கொப்பளிக்க வேண்டும். அல்லது பாதாம் பருப்பை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டாலும் தொண்டை எரிச்சல் சரியாகும்.
குறிப்பு
இவை எல்லாம் முதலுதவி போன்ற
வீட்டுமுறை சிகிச்சை முறைகள். இவற்றை செய்தும் சரியாகவில்லை என்றால் தாமதிக்காமல்
மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
--==--