விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, April 17, 2014

இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்சமா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையும் கேள்விகள் ஏதேனும் இருக்குமல்லவா? அப்படி சிலர் கேட்ட கேள்விகளும், அதற்கான விளக்கங்களும்….



  இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்சமா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையும் கேள்விகள் ஏதேனும் இருக்குமல்லவா?   அப்படி சிலர் கேட்ட கேள்விகளும், அதற்கான விளக்கங்களும்….   ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சில பெண்களுக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா? • பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால்  ஒவ் வொரு   முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால்  மருத்துவரைக் கலந்தாலோசிப்பது   பாதுகாப்பானது.  தாம்பத்திய உறவின் போது சில பெண்களுக்கு  பிறப்புறுப்பு திரவக் கசிவே இருப்பதில்லை. இதனால் பெண்ணுறுப்பு வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை. என்ன செய்யலாம்? • உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறுப்பு திரவக்கசிவு தானாகவே ஏற்படும். சில  பெண்களுக்கு  உறவுக்கு முன்பு, நீண்ட நேர முன் விளையாட்டு  தேவைப்படலாம். ஒவ்வொரு பெண்ணின்  உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி  எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கணவரிடம்  தெரியப்படுத்தி,  அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை  என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத்  திரவங்களை உபயோகிக்கலாம். அப்படியும் பலனில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரை கலந்தாலோச்சிக்கவும்.   குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத்தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச்சினைகள்  வருமா? • பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும்.  ஆனால்   மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே அவை எடுத்துக்  கொள்ளப்பட வேண்டும்.    மன உளைச்சலுக்கும், மாதவிலக்கு தள்ளிப் போவதற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா? • நிச்சயமாக உண்டு. மன உளைச்சல் காரணமாக ஹார்மோன் மாறுதல்கள்  ஏற்பட்டு, மாத   விலக்கு இரண்டொரு நாட்களுக்கோ அல்லது அதற்கு  மேலுமோ  தள்ளிப் போகலாம்.  கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் மார்பகங்கள் அளவில் பெருத்துப் போகுமா? • கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் சில பெண்களுக்கு உடலிலுள்ள  தண்ணீரின்   சேமிப்பு  காரணமாக மார்பகங்களில் வலியும், வீக்கமும்,  மென்மையான உணர்வும்  ஏற்படலாம்.  ஆனால் மார்பக அளவு கூட  வாய்ப்பில்லை. இன்னும் சில பெண்களுக்குக்   கருத்தடை  மாத்திரைகள்  சாப்பிடு வதன் விளைவால் உடல் பெருக்க வாய்ப்புகள்   உண்டு.  அதனாலும்  மார்பகங்கள் பெருத்து விட்ட மாதிரித் தோன்றும்.  பெண் பிறப்புறுப்பில் நாற்றம் ஏன் ஏற்படுகிறது? அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்? • ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின்  தாக்குதலால்   இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள  வேண்டும். மாதவிலக்கிற்கு   முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ  அப்படி நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில்   ஏற்படுகிற வேதி  மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால்   பிறப்புறுப்பை  அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும்.    திருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கலாம்? • ஒரு வருடம் வரை காத்திருக்கலாம். கருத்தடை முறைகள் எதையும்  பின்பற்றாமல்   தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்களில் 80 சதவிகிதத்தினர்  ஒரு வருடத்திற்குள் கர்ப்பம்   தரிக்கின்றனர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர்  மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை   மேற்கொள்ள  வேண்டியிருக்கிறது.  பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்? • பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது  தானாக வந்து   தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும்  அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா   கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று  போன்றவையும் இதற்கான பிற   காரணங்கள்.  தொடர்ந்து ஆன்டிபயாடிக்  மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின்   விளைவாக  பிறப்புறுப்பில்  ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு   ஏற்படலாம். தொடர்ந்து அரிப்பு இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை கலந்தாலோச்சிக்கவும்.  பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரி வருகிறது அவற்றை அறுவை மூலம் நீக்கலாமா? • சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. பிரசவத்திற்குப் பிறகு  பிறப்புறுப்பு   விரிவடைவதால் இவை தானாக மறைந்து விடும். என்றாலும்  மருத்துவரிடம் நேரில் ஆலோசனை பெற்றுக் கொள்வது  நலம்.  ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது நிஜமா? • சரியாகவும், தரமானதாகவும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம்  இது   பாதுகாப்பானதே. 14 சதவிகிதப் பெண்கள் ஆணுறை உபயோகித்த  போதும்   கர்ப்பமடைகிறார்கள்.


இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்சமா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையும் கேள்விகள் ஏதேனும் இருக்குமல்லவா?

அப்படி சிலர் கேட்ட கேள்விகளும், அதற்கான விளக்கங்களும்….

ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சில பெண்களுக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?
  • பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால்  ஒவ் வொரு   முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால்  மருத்துவரைக் கலந்தாலோசிப்பது   பாதுகாப்பானது.

தாம்பத்திய உறவின் போது சில பெண்களுக்கு  பிறப்புறுப்பு திரவக் கசிவே இருப்பதில்லை. இதனால் பெண்ணுறுப்பு வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை. என்ன செய்யலாம்?
  • உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறுப்பு திரவக்கசிவு தானாகவே ஏற்படும். சில  பெண்களுக்கு  உறவுக்கு முன்பு, நீண்ட நேர முன் விளையாட்டு  தேவைப்படலாம். ஒவ்வொரு பெண்ணின்  உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி  எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கணவரிடம்  தெரியப்படுத்திஅதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை  என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத்  திரவங்களை உபயோகிக்கலாம். அப்படியும் பலனில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரை கலந்தாலோச்சிக்கவும்.


குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத்தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச்சினைகள்  வருமா?
  • பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும்ஆனால்   மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே அவை எடுத்துக்  கொள்ளப்பட வேண்டும்.


மன உளைச்சலுக்கும், மாதவிலக்கு தள்ளிப் போவதற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா?
  • நிச்சயமாக உண்டு. மன உளைச்சல் காரணமாக ஹார்மோன் மாறுதல்கள்  ஏற்பட்டு, மாத   விலக்கு இரண்டொரு நாட்களுக்கோ அல்லது அதற்கு  மேலுமோ  தள்ளிப் போகலாம்.

கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் மார்பகங்கள் அளவில் பெருத்துப் போகுமா?
  • கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் சில பெண்களுக்கு உடலிலுள்ள  தண்ணீரின்   சேமிப்பு  காரணமாக மார்பகங்களில் வலியும், வீக்கமும்மென்மையான உணர்வும்  ஏற்படலாம்ஆனால் மார்பக அளவு கூட  வாய்ப்பில்லை. இன்னும் சில பெண்களுக்குக்   கருத்தடை  மாத்திரைகள்  சாப்பிடு வதன் விளைவால் உடல் பெருக்க வாய்ப்புகள்   உண்டுஅதனாலும்  மார்பகங்கள் பெருத்து விட்ட மாதிரித் தோன்றும்.

பெண் பிறப்புறுப்பில் நாற்றம் ஏன் ஏற்படுகிறது? அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்?
  • ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின்  தாக்குதலால்   இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள  வேண்டும். மாதவிலக்கிற்கு   முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ  அப்படி நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில்   ஏற்படுகிற வேதி  மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால்   பிறப்புறுப்பை  அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும்.


திருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கலாம்?
  • ஒரு வருடம் வரை காத்திருக்கலாம். கருத்தடை முறைகள் எதையும்  பின்பற்றாமல்   தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்களில் 80 சதவிகிதத்தினர்  ஒரு வருடத்திற்குள் கர்ப்பம்   தரிக்கின்றனர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர்  மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை   மேற்கொள்ள  வேண்டியிருக்கிறது.

பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?
  • பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது  தானாக வந்து   தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும்  அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா   கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று  போன்றவையும் இதற்கான பிற   காரணங்கள்தொடர்ந்து ஆன்டிபயாடிக்  மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின்   விளைவாக  பிறப்புறுப்பில்  ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு   ஏற்படலாம். தொடர்ந்து அரிப்பு இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை கலந்தாலோச்சிக்கவும்.

பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரி வருகிறது அவற்றை அறுவை மூலம் நீக்கலாமா?
  • சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. பிரசவத்திற்குப் பிறகு  பிறப்புறுப்பு   விரிவடைவதால் இவை தானாக மறைந்து விடும். என்றாலும்  மருத்துவரிடம் நேரில் ஆலோசனை பெற்றுக் கொள்வது  நலம்.

ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது நிஜமா?

  • சரியாகவும், தரமானதாகவும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம்  இது   பாதுகாப்பானதே. 14 சதவிகிதப் பெண்கள் ஆணுறை உபயோகித்த  போதும்   கர்ப்பமடைகிறார்கள்.




==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்