விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, April 25, 2014

குழந்தை தொடர்ந்து விடாமல் அழும் காரணம் என்ன?



 விடாமல் குழந்தை அழும் காரணம் என்ன? குழந்தைகள் சில சமயம் காரணம் இல்லாமல் அழுது கொண்டு இருக்கும் . சில பொதுவான காரணங்கள் கீழே :   வயிற்று வலி :(Abdominal Colic):   இது மிக முக்கிய காரணம் . பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக வரும் . விட்டு விட்டு வரும் . இடை பட்ட நேரத்தில் நன்றாக விளையாடும் . வயிறு சிறிது உப்பிஇருக்கும் . பால் குடிக்காது . பொதுவாக இது மாலைஇரவு நேரங்களில் வரும் .  முதல் நாள் வலி வந்த அதே நேரத்தில் அடுத்த நாளும் வரும் .4- 6 வார குழந்தைகளுக்கு இது அதிகமாக காணப்படும் .   அழும் போது குழந்தையை வலது புறமாகவோ ,குப்புற படுக்க வைத்தாலோ வலி குறையும்   காது வலி :   பாட்டிலில் பால் தருவது , சளி , மூக்கு அடைப்பு ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும் . காது மடலை தொட்டால் வலி அதிகமாகி அழும்   மூக்கு அடைப்பு :   படுக்க வைத்தால் குழந்தை அழும் , நேராக வைத்தால் அழுகை குறையும் . மூச்சு விட திணறும் . பால் குடிக்க முடியாது . சளி இருக்கும் . அழுகை தொடர்ச்சி ஆக இருக்கும் .   பூச்சி கடி :   குழந்தை விடாமல் அழுதால் உடனே உடைகளை கழட்டி ஏதேனும் சிறு சிறு பூச்சி, எறும்பு உடலில் கடித்து சிவந்து உள்ளதாஎன பார்க்க வேண்டும் .  இதர காரணங்கள் :  தடுப்பூசி போட்டபின் வரும் வலி  சிறு சிறு கட்டி , கொப்புளங்கள்   Diaper Rash-ஆசன வாய், பிறப்பு உறுப்பு ஆகிய இடங்களில் வரும் அரிப்பு .  இறுக்கமான உடைகள், உடைகளில் இருக்கும் கூர்மையான ஹூக்குகள் அல்லது மெட்டல் டிசைன்கள்.  வெப்பநிலை மாறுபாடு -சூடான அல்லது குளிர்ச்சியான சூழ்நிலை   காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உடன் குழந்தை நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.



விடாமல் குழந்தை அழும் காரணம் என்ன?
குழந்தைகள் சில சமயம் காரணம் இல்லாமல் அழுது கொண்டு இருக்கும் . சில பொதுவான காரணங்கள் கீழே :

வயிற்று வலி :(Abdominal Colic):
v  இது மிக முக்கிய காரணம் . பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக வரும் . விட்டு விட்டு வரும் . இடை பட்ட நேரத்தில் நன்றாக விளையாடும் . வயிறு சிறிது உப்பிஇருக்கும் . பால் குடிக்காது . பொதுவாக இது மாலைஇரவு நேரங்களில் வரும் .
v  முதல் நாள் வலி வந்த அதே நேரத்தில் அடுத்த நாளும் வரும் .4- 6 வார குழந்தைகளுக்கு இது அதிகமாக காணப்படும் .
v  அழும் போது குழந்தையை வலது புறமாகவோ ,குப்புற படுக்க வைத்தாலோ வலி குறையும்

காது வலி :
ü  பாட்டிலில் பால் தருவது , சளி , மூக்கு அடைப்பு ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும் . காது மடலை தொட்டால் வலி அதிகமாகி அழும்

மூக்கு அடைப்பு :
v  படுக்க வைத்தால் குழந்தை அழும் , நேராக வைத்தால் அழுகை குறையும் . மூச்சு விட திணறும் . பால் குடிக்க முடியாது . சளி இருக்கும் . அழுகை தொடர்ச்சி ஆக இருக்கும் .

பூச்சி கடி :
ü  குழந்தை விடாமல் அழுதால் உடனே உடைகளை கழட்டி ஏதேனும் சிறு சிறு பூச்சி, எறும்பு உடலில் கடித்து சிவந்து உள்ளதாஎன பார்க்க வேண்டும் .

இதர காரணங்கள் :
Ø  தடுப்பூசி போட்டபின் வரும் வலி
Ø  சிறு சிறு கட்டி , கொப்புளங்கள்
Ø  Diaper Rash-ஆசன வாய், பிறப்பு உறுப்பு ஆகிய இடங்களில் வரும் அரிப்பு .
Ø  இறுக்கமான உடைகள், உடைகளில் இருக்கும் கூர்மையான ஹூக்குகள் அல்லது மெட்டல் டிசைன்கள்.
Ø  வெப்பநிலை மாறுபாடு -சூடான அல்லது குளிர்ச்சியான சூழ்நிலை


காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உடன் குழந்தை நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.





==-==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்