பாலியல் உந்தல் SEX DRIVE
பருவமானவுடன் திடீர் என பாலியல்
விருப்பு ஏன் ஏற்படுகிறது?
ஹார்மோன்கள்
குறிப்பாக அன்ட்றோஜன் என்கின்ற ஆண்களுக்கான ஹார்மோன் ஆண் பெண் இருபாலாருக்கும்
உண்டு. அன்ட்றோஜன் தான் பாலியல் உந்துதலை ஏற்படுத்துகிறது. பாலியல் உறவு கொள்ளத்
தூண்டுகிறது. பாலியல் உந்துதல் இல்லாவிட்டால் பாலியல் உறுப்புகள் எல்லாம் ஒரு
பயனுமற்று போகும். இனமே இல்லாது போகும். நமது
உயிர் படைப்பின் நோக்கம் இதுவல்லவே.
இதனைப் பற்றி ஆழ்ந்து
சிந்திப்பீர்களாயின் பாலியல் விருப்பேயற்ற குழந்தைகள் பருவம் ஆன பிறகு கூட பல
வாரங்களுக்கு பாலியல் சிந்தனை அற்று இருப்பர். அதன் பின்னர் எப்பொழுதும் பாலியல்
சிந்தனையில் மூழ்கி இருப்பார்கள்.
வயது வந்தவர்களுக்கும்
செயற்கை அன்ட்றோஜன் செலுத்தப்பட்டால் பருவமானவர்களைப் போலவே பாலியல் உந்தல்
பெறுவார்கள். வயது வந்தவர்கள் பாலியல் உந்துதல் குறைவாக இருப்பதற்குக் காரணம்
பரம்பரை ஜீன்ஸ் அவர்களுக்கு ஒத்துவருவதில்லை. குழந்தைகளைப் பெற்று எடுக்க
வேண்டுமென்ற ஆர்வமும் இல்லை.
ஏன் பருவமானவர்கள் உடனடியாக
பாலியல் உறவு கொள்வதில்லை?
சிலர் ஈடுபடுகிறார்கள்.
அநேகம் பேர் அப்படியில்லை. ஏனெனில் இது அவ்வளவு சுலபமானதல்ல. குழந்தைகள் நிலையான
குடும்பங்களில் தாய் தந்தையர் அரவணைப்பில் வாழ்கிறார்கள். பாலியல் உறவு கொள்ள பெண்ணிற்கும் பையனுக்கும் இடையே நெருக்கம் கூடுதலாக
இருத்தல் வேண்டும். குழந்தை பிறக்கு முன்னும்
பின்னும் பெண்தானே குழந்தையோடு கூடிய அளவு ஈடுபாடு கொண்டிருப்பதனால் பெண்கள் கூடிய
நெருக்கமான உறவுகள் ஏற்படுவதை விரும்புகின்றனர். பையன்கள்
பாலியல் உறவை வெறும் ஒரு சம்பவமாகவே கருதுகின்றனர். பெண்கள் ஏன் இதில் கூடுதலான
தயக்கம் காட்டுகிறர்கள் என்பது ஆண்பிள்ளைகளுக்கு விளங்கவில்லை. இதே ஆண்கள் தான்
பெண்கள் உடன் சம்மதத்தைத் தெரிவித்தால் மிகவும் மலிவானவர்கள் என்றும் கருத்து
வெளியிடுகிறார்கள்.
இத்தகைய ஆண்களின் அணுகுமுறையைப் பெண்கள் எதிர்க்கிறார்கள. சும்மா பார்த்து
ரசிப்போம் என்ற பாணியில் நடக்கிறார்கள். பொறுப்பெதுவும் கட்டுப்பாடு எதுவுமற்ற
பாலியல் உறவை விரும்புகிறார்கள். திருமணம் செய்வது பற்றிச் சந்தேகம்
கொள்ளுகிறார்கள்.
பாலியல் உறவுகொள்ள தயார் நிலை
அடையாத பருவமானவர்கள் செய்வதென்ன?
பாலியல் உறவு பற்றி அநேக
கற்பனை எண்ணங்கள் தோன்றுகின்றன. இதனைப் பற்றி நிறைய
புத்தகங்கள், இனையதளங்கள் உள்ளன. ஆண்கள் பெண்கள் இருவரும் நிறைய
ஆபாசப் புத்தகங்களைப் படிக்கின்றார்கள் இனைய தளங்களை பார்க்கிறார்கள். பருவமானவர்கள் செய்கின்ற மற்ற
நடவடிக்கை தாமாகவே விந்துவை வெளியேற்றிக் கொள்வதாகும். இதனால் பாலியல் வெறி
ஓரளவுக்குத் தணிகிறது. தாமாகவே விந்துவை வெளியேற்றிக் கொள்வதால் உள்ள சில நன்மைகள் பின்வருமாறு:.
ü எல்லாம்
நீங்களே!வேறு ஒருவரும் தேவைப்படாது.
ü யாருமே
கருப்பம் தரிக்கமாட்டார்கள்.
ü யாருக்கும்
எந்த நோயும் தொற்றிக்கொள்ளாது.
ü உங்கள்
உடலைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்து தேவையைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.
மேலும் விபரங்களுக்கும், ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment
please Call us or Mail Us
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00
– தாழ்வுமனப்பாண்மை, சுய இன்ப பழக்கம், – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==