கருத்தரிக்கும்
முன் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
புதுமணத்
தம்பதிகளும் சரி, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளவர்களும்
சரி சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ü கருத்தரிக்க ஏற்ற வயதை அடைந்துவிட்டோமா? அல்லது அதைக் கடந்து விட்டோமா?
ü தாயாகும் பெண்ணிற்கு அம்மைத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா?
ü உங்கள் கணவருக்கும், உங்களுக்கும் ரத்தப் பொருத்தம் உள்ளதா?
ü கருத்தடைக்காக ஏதேனும் மருந்து பயன்படுத்தியிருந்தால்
அதனை நிறுத்த வேண்டிய காலம் எது?
ü கருத்தடை மருந்தை நிறுத்தியப் பிறகு எத்தனை மாதங்கள்
கழித்து கருத்தரிக்கலாம்?
ü தாயாகும் பெண்ணிற்கு புகைப்பழக்கம், மதுப்பழக்கம்?
ü உடல் நலக் குறைப்பாட்டிற்காக ஆண்டுக்கணக்கில் ஏதேனும்
மருந்து உட்கொள்கிறீர்களா? அதனை கருவுறுதலின் போது தொடரலாமா அல்லது நிறுத்த வேண்டியது
அவசியமா?
ü உங்கள் பணியிடம், கருத்தரிப்புக்கு ஏதேனும் பங்கம் விளைவிக்குமா?
ü பணியிடங்களில் விளையும் ஆபத்துகள் என்ன?
ü பரம்பரையாக வரும் நோய் பாதிப்புகள் என்ன? அதனை தடுக்க வழி உண்டா?
ü எப்போது கருத்தரிக்க இயலும்?
ü கருத்தரிக்க எவ்ளவளவு காலம் ஆகும்?
ü கருவில் இருக்கும் குழந்தையை ஆணா பெண்ணா என்பதை அறிந்து
கொள்ளலாமா?
ü பிறவிக் குறைபாடற்ற, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக் கொள்வது எப்படி?
ü சுகப் பிரசவம் ஆவதற்கான வழிகள் என்ன?
இது போன்ற
கேள்வவிகளுக்கு பதில்களைத் தெரிந்து கொண்டு பின்னர் திட்டமிட்டு குழந்தை
பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.