கேள்வி: மாதவிடாயின் போது உடலுறவு கொள்வது சரியா? தவறா?
பதில்:
மாதவிடாய் என்பது வயதுக்கு வந்த பெண்களுக்கு சாதாரணமாக ஏற்படும் ஒரு நிகழ்வு. மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் நிறையப் பேரின் மனதில் இருக்கிறது. இதுபற்றி பல மூட நம்பிக்கைகளும் நம்மிடையே உலவுகின்றன.
உண்மையில் மாதவிடாயின் போது உடலுறவு கொள்வது ஒரு தவறா என்றால்
இல்லை
உண்மையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் பல நன்மைகள் ஏற்படலாம். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் ஒரு பெண்ணுக்கு வயிற்று வலி , மன உளைச்சல் போன்றவை சாதாரணமாக ஏற்படலாம். இந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபடும்போது இந்தப் பிரச்சினைகள் குறைய வாய்ப்பு உண்டு. அதாவது மாதவிடாய் நேரத்து அசௌகரியங்கள் உடலுறவில் ஈடுபடும் போது குறையலாம்.
மேலும் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபடும் போது மற்ற நேரங்களை விட பெண்ணுக்கு அதிகம் திருப்தி கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. காரணம் மாதவிடாய் நேரத்தில் அவளது உறுப்புக்கள் அனைத்தும் ஹார்மோன்களால் மாற்றமடைந்து காணப்பட்டு உறவின் மகிழ்ச்சியைக் கூட்டலாம்.
மேலும் நம்மிடம் உள்ள தவறான நம்பிக்கை போல இந்த காலத்தில் உறவில் ஈடுபடுவதால் ஆணுக்கோ அல்லது பெண்ணின் கருப்பைக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை.
மற்றும் இந்தக் காலத்தில் உறவில் ஈடுபட்டால் கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவு. ஆனாலும் மிகவும் அரிதாக இந்தக் காலத்திலும் கருத்தரித்தல் நடைபெறலாம். ஆகவே குழந்தை பிறப்பைத் தவிர்க்க விரும்புபவர்கள் நிச்சயமாக கருத்தடை முறைகளை பின்பற்ற வேண்டும்.
மாதவிடாய்
காலத்தில் உறவில்
ஈடுபடுவதால் எந்த
மாதிரியான விளைவுகள்
ஏற்படலாம்? அசவுகரியங்கள்
என்ன?
v மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இரத்தப்போக்கு இருப்பதால் பலவீனமாக இருப்பார்கள், இந்த நேரத்தில் உடலுறவு கொள்வது அவர்களின் பலவீனத்தை மேலும் அதிகமாக்கும். மேலும் உடலுறவில் நாட்டமில்லாமல் போகலாம். எனவே பெண்ணின் விருப்பமில்லாமல் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளக்கூடாது.
v இரத்தப்போக்கு இருப்பதால் ஆண்களுக்கு ஒருவிதமான சங்கடம் ஏற்படலாம். மாதவிடாய் காலத்தில் பெண்களை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளக்கூடாது
v மாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடும் போது பால்வினை நோய்கள் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். அதாவது சிபிலிஸ் (Syphilis)
(Tests VDRL, TPHA) , கல்லீரல் அலர்ச்சி (Hepatitis
B), போன்ற நோய்கள் இருந்தால் இது மற்றவருக்குத் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகமாகலாம்.
v பெண்ணுறுப்பில் முத்தமிடல் நாக்கு வழிதூண்டல் முதலியவற்றை செய்ய
கூடாது.
v இரத்த வாடை இருவருக்கும் அருவருப்பை ஏற்படுத்தலாம்.
v மேலும் காண்டம் உபயோகிப்பது இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும், எனவே இந்த நேரத்தில் தவறாமல் காண்டம் உபயோகிப்பது நல்லது.
அதனால் உங்களுக்கு நம்பிக்கைக்கு உரியவரோடு மட்டும் உறவு வைத்துக் கொண்டால் மாதவிடாய் காலத்திலும் உறவு வைத்துக் கொள்ளலாம். சிலபேருக்கு மற்றைய நாட்களை விட மாதவிடாயின்போது உடலுறவு கொள்வதால் அதிக சந்தோஷம் கிடைக்கலாம்.