- அவரைப் பிஞ்சை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர, ரத்த அழுத்தம் விரைவாக குறையும்.
- தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடிக்க, வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் ஆறும்.
- மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
- பாகற்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வர, வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.
- மஞ்சள், அருகம்புல் மற்றும் சுண்ணாம்பு கலந்து நகச்சுற்று ஏற்பட்டிருக்கும் விரலில் கட்ட நகச்சுற்று குணமாகும். அல்லது கொழுந்து வெற் றிலையுடன் சுண் ணாம்பு சேர்த்தும் கட்டலாம்.
- வேப்பம் பூவை உலர்த்தி, தூள் செய்து, வெந்நீரில் கலந்து உட்கொள்ள, வாயுத் தொல்லை நீங்கும். வேப்ப எண்ணெயை காய்ச்சி,சேற்றுப்புண் உள்ள இடங்களில் தடவ குணம் கிடைக்கும்.
- வெற்றிலையைப் பிழிந்து சாறு எடுத்து தேன் கலந்து அருந்தி வர தீராத இருமல் குணமாகும்.
- அதிகாலையில் வெறும் வயிற்றில் வேப்பங்கொழுந்தை தின்று வர வயிற்றில் உள்ள கிருமிகள் ஒழியும்.
- இரண்டு கரண்டி கறிவேப்பிலை சாற்றை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.
- பப்பாளித் பழத் துண்டை பல் வலி உள்ள இடத்தில் அடக்கி வைக்க பல் வலி தீரும்.
- பல் சொத்தையான இடத்தில் கிராம்பை நசுக்கி வைத்து, வாயில் வரும் உமிழ்நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தால் பல் சொத்தை காணாமல் போகும்.
- வாந்தி எடுத்தவர்களுக்கு, வெறும் சீரகத்தை வறுத்து அதில் நீர் ஊற்றி கொதிக்க வைத்த சீரக கஷாயத்தைக் கொடுக்க உடனடியாக வாந்தி நிற்கும்.
---