- பிரண்டை என்பது ஒரு தவாரம், இது கொடி போல வளரும். இதன் தண்டுப் பகுதிதான் உண்பதற்கு ஏற்றதாகும். பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை என பல வகை உண்டு.
- இவற்றின் குணம் ஏறக்குறைய உண்டாகும். இதில் முப்பிரண்டை கிடைப்பது அரிது.
- பிரண்டையை நன்கு வதக்கி புளியுடன் சேர்த்து சமைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாவில் அரிப்பையும், வயிற்றில் எரிச்சலையும் ஏற்படுத்திவிடும்.
- முற்றியதாக அல்லாமல் இளந்தண்டை பயன்படுத்தலாம். இதனைப் பறிக்கும்போது கையில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொண்டு பறித்தால் கையில் அரிப்பு உண்டாகாது.
- பிரண்டையில் கால்சியம்,கேராட்டின் மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ளது. எலும்பு வளர்ச்சிக்கு பிரண்டை அதிகமாக பயன்படும்
- பிரண்டையை நெய்விட்டு வதற்கி, துவையல் செய்து சாப்பிட்டு வர நல்ல பசி உண்டாகும்.
- பிரண்டை, கற்றாழை வேர்,நீர் முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் சம அளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர உள் மூலம் குணமாகும்.
- எலும்பு முறிவுக்கு, பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி, பொடியாக்கி, நெய் விட்டு லேசாக வறுத்து 1-2 கிராம் அளவு காலை மாலை ஆகிய இரு வேளை உட்கொண்டுவர, முறிந்த எலும்புகள் விரைவில் கூடும்.
- பிரண்டையை சிறுந்தீயில் இட்டு வதக்கி சாறு பிழிந்து 20 - 30 மில்லி அளவு குடித்து வர முறையற்ற மாதவிலக்கு சீராகும்.
- பிரண்டையை தூளாக்கி மோரில் ஊற வைத்து காலையில் மட்டும் 2-3 நாட்கள் குடித்து வர பெருங்கழிச்சல் குணமாகும்
---