விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, May 10, 2012

உடல்தானம்






உடல்தானம்
  • உயிருடன் உள்ள ஒருவர் உடல் தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்கள் தானம் செய்ய  இசைவு தெரிவிக்கலாம்
  • இயற்கை மரணம் என்றால் மட்டுமே பெறப்படும். விபத்து என்றால் உடல் பெறப்படமாட்டாது
  • உடல் உறவினர்களிடம்  அளிக்கப்படாது.
  • உடல் உடற்கூறியல் பிரிவில் வைக்கப்படும். முதல் வருட மாணவர்கள் உடற்கூறியல் குறித்து படித்த அறிவதற்காக உடல் பயன்படும்
  • அவ்வாறு தானம் அளிக்கப்பட்ட உடலிருந்து கண்களும், எலும்புகளும் எடுக்கப்படலாம். இவை நோயாளர்களுக்கு பயன் படும்
பலன் : கண்களால் இருவருக்கு, எலும்புகளால் பல  நோயாளர்களுக்கு, மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு.

உறுப்பு தானம் என்பது வேறு !! உடல் தானம் என்பது வேறு. உறுப்பு தானம் என்பது மூளைச்சாவு எற்பட்டால் மட்டுமே. அதன் மூலம் மற்றொரு உயிரை காக்கலாம். உடல் தானம் என்பது இயற்கை மரணம் ஏற்பட்டால் மட்டுமே. இது மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்காக.  உடல் தானம் மூலம் இதய மாற்று அறுவை சிகிச்சை நடப்பதாக எழுதப்படுவது நிஜமல்ல !!














---

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்