சரும பராமரிப்பு – எளிய வீட்டுமுறை
வைத்தியம்
சரும நோய்:
கமலா ஆரஞ்சு
தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து
குளித்து வர சரும நோய் குணமாகும்.
தோல் பளபளப்பாக;
தேங்காய்
எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள்
தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
தேமல்:
வெள்ளை பூண்டை(Garlic)
வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
வியர்க்குரு நீங்க:-
- சந்தனத்தைக் கொண்டு வியர்க்குரு உள்ள இடத்தில் தேய்க்க
பலன் தரும்.
- நிறைய வியர்க்குரு வந்து அவதிப்படுபவர்கள் சாதம் வடித்த
கஞ்சியை தடவிக்கொண்டு சிறிது நேரம் ஊறியபிறகு குளித்தால் வியர்க்குரு மறையும்.
எச்சில் தழும்பு மறைய :-
பூவரசம்
காயின் சாற்றைத்தடவி வர மறையும்.
அம்மை;
ஆத்திப்பழம்
: அம்மை குணமாகும்
புண் ஆற:-
v வேப்பெண்ணெயைத் தடவுவதன் மூலம் புண் ஆறும்.
v வசம்பு தூளை காயத்தின்மீது தடவினால் காயம் குணமாகும்.
v வெங்காயச் சாற்றில் மஞ்சள் பொடியைக் குழைத்துக் கட்ட அடிபட்ட காயங்கள்
குணமாகும்
v சப்பாத்திக்கள்ளி பூவை கழுவி சுத்தம் செய்து விழுதாக அரைக்க வேண்டும்.
அந்த விழுதை கட்டியின் நிலைக்கேற்ப தொடர்ந்து கட்டி வந்தால் கட்டி உடைந்து ரணம் தானாக
ஆறிவிடும்.
v குப்பைமேனி இலைகளை உப்புடன் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகள் இருக்கும்
இடத்தில் தேய்த்துக் குளித்தால் சொறி, சிரங்குகள் நீங்கும்.
v நுணா இலையை அரைத்து பத்து போட்டால் சிரங்கு ஆறும்.
தேமல் மறைய;
வெள்ளைப்
பூண்டின் நான்கு பல் எடுத்து பச்சை வெற்றிலை ஒன்றுடன் கசக்கி, இந்தச் சாற்றைத் தேமல்
உள்ள பகுதிகளின் மேல் தடவி வரவும். நாளடைவில் தேமல் மறையும்
தீப்புண்:
Ø இதன் சாற்றை தீப்புண்களில் தடவினால் குணமாகும். கற்றாழையில் சாறெடுக்க,
அதை லேசாக நெருப்பில் வாட்டி பிதுக்கியெடுக்க வேண்டும். இலையின் மேற்புறத்தை சீவி அப்புறப்படுத்தியும்
சாறு எடுக்கலாம்.
Ø வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர
தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
==--==