கர்ப்பம்
தரிக்க எதிர்பார்த்திருக்கும் பெண்கள் செய்ய /கடைப்பிடிக்க வேண்டியவை!
1.இயற்கையான
எந்த உணவுகளையும் விருப்பப்படி சாப்பிடலாம்.
2.செயற்கையான
இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது (சோடா போன்றவை)
3.பழுத்த
அன்னாசி சாப்பிடுவதால் கர்ப்பத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை
4.போலிக்
அசிட் எனப்படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழுங்குவது நல்லது
5.பாராசிட்டமோல் மாத்திரை விழுங்குவதால்
எந்தப் பாதிப்பும் ஏற்படாது.ஆனால் அதிகம் சாப்பிட கூடாது.
6.வேறு எந்த
மாத்திரை எடுக்கும் முன்னும் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்
7.எந்தவொரு
மருத்துவப் பரிசோதனைக்கு (குறிப்பாக எக்ஸ்
-ரே ) முன்னும் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
8.இறுதியாக
மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
9.உங்களுக்கு
நீரழிவு, வலிப்பு ,ஆஸ்த்மா, பிரசர்
போன்ற நோய்கள் இருப்பின் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவை சிறந்த கட்டுப்பாட்டில்
இருக்க வேண்டும்.
10.மேலே சொன்ன
நோய்களுக்கு மாத்திரைகள் உட்கொள்ளும் நபர் என்றால் கர்ப்பம் தரிக்கும்
முன்னமே மருத்துவரிடம் கூறி கர்ப்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத
மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
11.கர்ப்பம்
தரித்தவுடன் கர்ப்பிணிகளுக்கான மருத்துவரிடம் எவ்வளவு விரைவாக முடியுமோ
அவ்வளவு விரைவாக பதிவு செய்து கொள்ளவும்.