விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, December 23, 2011

தெரிந்த பெயர்கள் தெரியாத மருத்துவ பயன்கள்-1



தெரிந்த பெயர்கள் தெரியாத மருத்துவ பயன்கள்-1

அத்திக்காய் :- இதனால் பிரமேகம், வெட்டை, விரணம்,சூலை முதலியன நீங்கும், மலங்கழியும்.

அவரைப்பிஞ்சு :- இது இரவு போஜனத்திற்கும், மருந்துண்பவர்களுக்கும், திரிதோஷத்திற்கும் பத்திய உணவாகும்.

கத்திரிப்பிஞ்சு :- பித்தம், கபம் நீங்கும், காயாக இருப்பின் சிறிது உஷ்ணத்தைத்தரும்.

கொத்தவரை :- இது அபத்திய உணவாகும், மருந்தை முறிக்கும், பித்தாதிக்கம், பித்தவாயு, கபம் முதலிவைகளை உண்டாக்கும்.

சுண்டைக்காய் :- கைப்பு சுவையுள்ள காயால் , மார்புச்சளி, கிருமிநோய், வாதாதிக்கம் முதலியன குணமாகும். இதன் வற்றல் சீதபேதி,கிரகணி இவைகட்கு நன்று.

சுரைக்காய் :- இதனால் வாதபித்தம், மார்புநோய், புலிகநோய் முதலியன உண்டாகும். பத்தியத்திற்காகாது. சீதளமென்பர்.

பூசனிக்காய்:- இது உஷ்ணாதிக்கம்,மிகு பித்தம் இவைகளை நீக்கும். கபத்தையும் பசியையும் உண்டாக்கும். உடலுக்கு வன்மை தரும்.

பாகற்காய் :- இதனால் கிருமி நோய்,திரிதோஷகோபம், பாதரசதோஷம் முதலியன குணமாகும். விரேசனத்தையுண்டாக்கும்.

பீர்க்கங்காய் :- இதனால் பித்தமும், சீதளமும் அதிகரிக்கும்.

புடலங்காய் :- இதனால் பித்தம், கபம், சுக்கிலம் இவைகள் அதிகரிக்கும்.

முருங்கைக்காய் :- இதனால் கபம் நீங்கும். விந்து கட்டும், பத்திய உணவாம்.

வாழைக்காய் :- இதனால் வாந்தி பித்தம் பேதி இவைகள் குணமாகும் இரத்த விரித்தியையும் பலமும் உண்டாகும். வாதம் மிகும்.

வெண்டைக்காய் :- இதனால் அதிசாரம் , கிரகணி, சீதபேதி, முதலியன குணமாகும். விந்து கட்டும் கபவாதம் உண்டாகும்.

கலியாண பூசணிக்காய் :- உட்காய்ச்சல், பித்தம், மூத்திர கிரிச்சரம், அஸ்திதாது கதசுரம், இடுமருந்து தோஷம் முதலியன போம் வாதம் மிகும்.

வாழைப்பழம் :- இதனால் பாண்டு பித்தப்பிணிகள் முதலியன தீரும். அதிகமாக உண்ணில் மந்தத்தை உண்டாக்கும். மலத்தைப்போக்கும்.

பலாப்பழம் :- இதனால் வாதபித்த கபப்பிணிகள் யாவும் உண்டாகும். மிக்க உஷ்ணத்தையும், கரப்பானையும் உண்டாக்கும்.

மாம்பழம் :- இதனால் சொரி, சிரங்கு , கரப்பான், சீதபேதி, வயிற்றுவலி முதலியன உண்டாகும். பசிதீபனம் மட்டாகும்.

மாதுழம்பழம் :- இதனால், வாந்தி, கபம், விக்கல், தாகம், மாந்தம், சுரம், உஷ்ணாதிக்கம், பித்தாதிக்கம், இரத்தக்குறைவு  முதலியன நீங்கும். மலத்தைக்கட்டும்.

உலர்ந்ததிராட்சைப்பழம் :- இது மேக அழலையை தணிக்கும். மலத்தை இளக்கும், உதிரப்பெருக்கையுண்டாக்கும்.

ஆழ்வள்ளிக்கிழங்கு :- இதனால் வாதாதிக்கம் ,திரிதோஷதொந்தம், குன்மம்,மந்தம், அக்கினி முதலியனஉண்டாகும்.

உருளைக்கிழங்கு :- இது பலத்தை தரும். வாய்வைக்கண்டிக்கும், மந்தத்தையுண்டாக்கும்.

காராக்கருணைக்கிழங்கு :- இதனால் வாதநோய், இரத்தமூலம், அக்கினிமந்தம் முதலியன குணமாகும். பத்திய உணவாம்.

சேப்பங்கிழங்கு :- இது கபத்தை விரித்திசெய்யும், மருந்தின் குணத்தை கெடுக்கும்.

இஞ்சி :- இதனால் சந்நிசுரம், வாந்தி, பேதி,சூலை, வாதாதிக்கம்,காசம்போம், பசிதீபனத்தையும், ஜீரணசக்தியையும், உண்டாக்கும்.

மஞ்சள் :- இதனால் தலைவலி, ஜலதோஷம், வலி, வீக்கம், வாந்தி,விரணம் முதலியன போம், பசி தீபனமும், புருஷ வசியமும் உண்டாகும்.

முள்ளங்கி :- இதனால் குன்மம்,சூலை, குடல்வாதம், வாய்வு,கரப்பான், மூலகடுப்பு,கபம், முதலியன குணமாகும். பசிதீபனமும், சிறுநீரையும் அதிகரிக்கும்.

வாழைக்கிழங்கு அல்லது தண்டு :- இது சிறுநீரைப்பெருக்கும், கல்லடைப்பு, மகோதரம், மூத்திரக் கிரிச்சரம், சோபை முதலிய நோய்கட்கு சிறந்தது.

வெங்காயம் :- இது தேக உஷ்ணம், மூலம், இரத்தபித்தநோய், சிரங்கு முதலியன குணமாகும்.

ஆல்பகோராப்பழம் :- இது உஷ்ணத்தையும், பித்தத்தையும், அரோசகத்தையும் நீக்கும். மலத்தை இளக்கும்.

இளநீர் :- இது சூட்டைத்தணிக்கும்,சிறுநீரைப்பெருக்கும், பித்தகோபத்தையும், கபாதிக்கத்தையும் அடக்கும்.

எலுமிச்சம்பழம் :- இதனால் பித்தாதிக்கம், பைத்தியம்,கண்ணோய், வாந்தி, தாகம், பசியின்மை, அஜீரணம், பேதி முதலியன குணமாகும்.

பழம்புளி :- பழைய புழியினால், திரிதோஷம்,வாதநோய், சூலை, வாந்தி, உஷ்ணாதிக்கம் முதலியன குணமாகும்.

பிரண்டை :- பசிமந்தம், அஜீரணம் , சூன்மம், அதிசாரம், கபதோஷம், இரத்தமூலம், முதலியன குணமாகும்.

பச்சைமிளைகாய் :- இதனால் வாதாதிக்கம், துத்திரோகம், இடுப்புவலி, சீதள சைத்தியம், முதலியன குணமாகும்.

விழாம்பழம் :- விழாம்பழத்தினால் சுவாசம்,காசம், பித்தாதிக்கம், பித்ததாகம், முதலியன குணமாகும். பசிதீபனமுண்டாகும்.

வெள்ளைப்பூண்டு :- இதனால் வாதம், சன்னிபாதம், கபாதிக்கம், சீதபேதி, நீரேற்றம், முதலியன குணமாகும்.

கரும்பு :- கரும்பின் சாற்றால் வாய்க்குமட்டல், வாந்தி,விக்கல், பித்தநோய்கள் முதலியன குணமாகும்.

சர்க்கரை :- இதனால் பித்ததோஷம், வமனம், அரோசகம், குணமாகும். கபத்தை இளக்கும். மருந்துகளுக்கு சிறந்த அனுபானமாகும்.

கற்கண்டு : - இதனால் கபதோஷம், வாந்தி, காசம், வெப்பம் முதலியன குணமாகும்.

பனங்கற்கண்டு : - இதனால் வெப்பம், மூத்திரகிரிச்சரம்,உஷ்ணதாகம் முதலியன குணமாகும்.

பனைவெல்லம் :- இதனால் குன்மம், வாந்தி, அரோசகம், திரிதோஷதொந்தம். முதலியன குணமாகும்.







---

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்