விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, March 14, 2014

உடல் பருமன் குறைய / பெருக / உடற் சூடு தணிய / மருக்கள் மறைய / பித்தம் குணமாக



homeopathy beauty treatment specialist Vivekanantha homeopathy clinic & psychological counseling center, Velachery, Chennai, panruti, cuddalore, Pondicherry, villupuram, Dr.senthil kumar best homeopathy specialist & famous psychologist in tamilnadu, india,



உடல் பருமன் குறைய...
Ø  வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
Ø  தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.
Ø  மோரில் வெந்தய பொடி கலந்து குடிக்கவும். வெந்தயம் குளிர்ச்சியானது, தலைவலி, சைனஸ்,குளிர்ச்சியான உடம்பு காரர்கள் பார்த்து சாப்பிடுங்கள்.
Ø  கொள்ளு சாப்பிட்டால் கூட வெயிட் குறையும். கொள்ளு ரசம்,கொள்ளு இனிப்பு சுண்டல்,கொள்ளு சூப் போன்றவைகள் சாப்பிடலாம்.
Ø  வாழைத்தண்டை சிறு துண்டுகளாக்கி இஞ்சி, எலுமிச்சம்பழச் சாறு, பூண்டு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
Ø  இரண்டு டம்ளர் மோருடன் இரண்டு காரட்டையும் நன்கு அரைத்து குடித்து வர ஒரு வாரத்திலிருந்து உடல் இளைக்கத் துவங்கிவிடும். போதும் என்ற நிலை வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்தி விடலாம்.
Ø  சோற்றுக்கற்றாழையை எடுத்து அதன்மேல் தோலை சீவிவிட்டு உள்ளே இருக்கும் சோற்றுப்பகுதியை சேகரித்து தினமும் 100 கிராம் அளவுக்கு அதில் நன்றாகத் தண்ணீர் விட்டு கழுவி சர்க்கரை சேர்த்து 3 வார காலம் சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு இளைக்கும்.
Ø  பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
Ø  காரட் தினசரி சமையலில் சேர்த்துக் கொள்வதுடன் இரண்டு டம்ளர் மோருடன் இரண்டு காரட்டையும்போட்டு மைய அரைத்துக்குடித்து வர ஒரு வாரத்தில் இருந்து உடல் இளைக்க ஆரம்பித்துவிடும். போதும் என்ற நிலை வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.



உடல் பெருக:
ü  கற்கண்டு சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.

ü  பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் தினசரி சேர்த்து வர உடலில் சதை பிடிப்பு ஏற்படும்.

ü  பறித்த பச்சை நிலக்கடலை நூறு கடலையும் நேத்திரம் வாழைப்பழம் ஒன்றும் ஒரு கப் பாலும் தினசரி சாப்பிட்டு வர உடல் விரைவில் பருக்கும்.

உடற் சூடு தணிய:-
v  ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

v  புளியங்கொட்டையை வறுத்துப்பொடி செய்து பாலில் கலந்து சாப்பிடவும்


உடலில் மருக்கள் மறைய :
Ø  சிலருக்கு முகம் மற்றும் உடலில் மருக்கள் அதிகமாக இருக்கும். இவர்கள் எலுமிச்சை சாற்றை இரவில் மருக்களின் மீது தொடர்ந்து தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் மருக்கள் மறையும்.


இரத்த பித்தம் குணமாக:-
v  கடுக்காயைப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேன் கலந்து காலையிலும் மாலையிலும் உட்கொள்ள குணமடையும்.

v  பித்தம் தலைக்கேறினால் தலைசுற்றல் வரும். பித்தம் தெளிய, ஒரு கைப்பிடி கொத்தமல்லியை வேகவைத்து, அதன் சாறினை பனைவெல்லம் சேர்த்து பருகினால் பித்தம் சத்தம் இல்லாமல் ஓடும்.







==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்