விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, March 18, 2015

மன நலன் பற்றி தெரிந்துகொள்வோம் - Know About Mental Health



 மன நலன் பற்றி தெரிந்துகொள்வோம் - Know About Mental Health  dr.senthil kumar panruti, chennai, vivekanantha clinic, velachery



மனநலம் பற்றிய விழிப்புணர்வு


மனநலம்

மனநலம் என்றால் என்ன?
உலக சுகாதார நிறுவனம் (World health Organization - WHO ), சுகாதாரம் என்பது உடல், மனம், சமுதாயம் மற்றும் ஆன்மீக நலன்களையும் உள்ளடக்கியதுஎன்று சுகாதாரம் பற்றி வரையறுத்துள்ளது.
ஒரு தனிநபரின் மனநலம் என்பது, தன்னுடைய முழுமையான ஆற்றலை வெளிப்படுத்துதல், அன்றாட வாழ்வியல் போராட்டங்களை தாங்கி முன்னேறுதல், நன்றாக வேலைகளை செய்தல், சமுதாயத்துக்கு தன்னாலான பங்கீட்டை சரியாக அளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று அது மேலும் கூறியுள்ளது. இதன் அடிப்படையில், மனநலம் என்பது தனிநபர் மற்றும் சமுதாயத்தின் வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு முக்கியம் என்பது அறியப்படுகிறது.
மனநலம் கீழ்கண்டவற்றை அதிகம் பாதிக்கிறது:
  • கல்வி முன்னேற்றம்
  • பணித்திறன்
  • தனிநபர்களுக்கிடையே நேரிடை நல்லுறவை மேம்படுத்துதல்
  • குற்றங்களின் எண்ணிக்கை
  • குடி மற்றும் போதைப்பொருள் பயன்பாடு

மனநலம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
450 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் மனநலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, 2020-ம் ஆண்டு வாக்கில், மன அழுத்தம் உலகின் இரண்டாவது பெரிய நோயாக மாறிவிடும் (முர்ரே மற்றும் லோபஸ், 1996). இது, முன்னேறிய மற்றும் முன்னேறி வரும் நாடுகளின் குணமாக்கும் திறனை விட அதிகமாக இருக்கும். சமூக மற்றும் பொருளாதார ரீதியாக இதற்கென செய்யப்படும் முதலீடுகளை மனநோய்களை குணமாக்கத் தேவைப்படும் முதலீடுகளைக் கருத்தில் கொண்டு, அவற்றை தடுத்தல் மற்றும் அவற்றுக்கான சிகிச்சையளித்தல் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இவ்வாறு, மனநலம் என்பது, உடல்நலம் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றுடன் நேரிடையாக தொடர்புடையதாகிறது.
  • மன அழுத்தம் காரணமாக இருதய மற்றும் இரத்தநாள நோய்கள் உருவாகின்றன என்று சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மனநலம் உடல் நலத்துடன் நேரிடையாக தொடர்புடையது.
  • சரியாக உண்பது, தொடர்ச்சியான உடற்பயிற்சி, போதுமான தூக்கம், பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுதல், புகையிலை மற்றும் மது பயன்படுத்துதல் ஆகியவைகளும் கூட மனநலக் குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றன.
  • வேலையின்மை, குடும்பங்களின் சிதைவு, வறுமை, போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை, மனநலக் குறைபாடுகளால் உண்டாகின்றன.
  • மனநலக்குறைவால், நோய் எதிர்ப்புத்திறன் குறைவதற்கும் வாய்ப்புள்ளது.
  • இதனால், மன அழுத்த நோய்க்கு உள்ளானவர்கள், மற்றவர்களைவிட மிககுறைந்த அளவே முன்னேற்றமடையமுடியும்.
  • நீண்ட நாள் நோய்களான,நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் போன்றவற்றால், மன அழுத்தம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள்?
கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் போன்றவற்றில் சமூகத்தால் வேறுபாடுகள் காட்டப்படுவதால், மனநல நோய்களுக்கான மருத்துவ உதவி பெற தாமதம் ஏற்படுகிறது. மனநல நோய்கள் பற்றிய தெளிவின்மை, குறிப்பான அறிகுறிகள் இல்லாதது ஆகியவை காரணமாக, நோய் கண்டறிவதிலும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • மனதளவில் வலு குறைந்தவர்கள் மற்றும் ஆவிகளால் மனநோய்கள் ஏற்படுதவதாக மக்கள் கருதுகிறார்கள்.
  • மனநோய்களை குணப்படுத்த முடியாது என்ற கருத்து பெரும்பாலான மக்களிடையே நிலவுவதால், மருத்துவ சிகிச்சை பெற தயங்குகிறார்கள்.
  • முன் தடுப்பு முயற்சிகள் பலனளிக்காது என்றே பலரும் கருதுகிறார்கள்.
  • மனநோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள், பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும், அவற்றை மறக்க இயலாத அடிமைத்தனத்தை உண்டாக்கிவிடும் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த மருந்துகளால் தூக்கம் மட்டுமே ஏற்படுவதாகவும் மக்கள் நினைக்கிறார்கள்.
  • உலக சுகாதார நிறுவன புள்ளிவிபரங்களின்படி, மனநோய்களால் உண்டாகும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அல்லது தடுப்பதற்குத் தேவையான நிதி பற்றாக்குறை பல நாடுகளில் நிலவுகிறது.
  • பல நாடுகளில் சமீபத்தைய காலம் வரை, மனநோய் மருத்துவமும், பிற நோய்களுக்கான மருத்துவமும் பிரித்தே கையாளப்பட்டு வந்துள்ளன.
  • பல மூடநம்பிக்கைகள் நிலவுவதாலும், சரியான புரிதல் இல்லாததாலும், மனநோய் உள்ளோர் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்வந்து செயலாற்றத் தயக்கம் காட்டுகின்றனர்.
  • தன்னார்வ நிறுவனங்களும் கூட, மனநோய் மருத்துவத்துறையை கடினமானது என்று நினைப்பதாலும், மனநோயாளிகளை கையாள தயங்குவதாலும், இத்துறையில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

மனநோய்கள் எதனால் ஏற்படுகின்றன?
உடல்ரீதியான காரணிகள்:
  • நியுரோ டிரான்மீட்டர்கள்: மூளையில் நியுரோ டிரான்மீட்டர்கள் எனப்படும் சிறப்பு இரசாயனங்களின் அசாதரணமான நிலைப்புத்தன்மைக்கும் மனநோய்களுக்கும் தொடர்புகள் இருப்பதாகக்கூறப்படுகிறது. மூளையில் உள்ள செல்களுக்கிடையே தகவல் தொடர்பு ஏற்பட நியுரோ டிரான்மீட்டர்கள் உதவுகின்றன. இவை சரியாக வேலை செய்யாவிட்டாலோ அல்லது அவற்றின் அளவுகள் நிலையில்லாமல் இருந்தாலோ, மூளையில் தகவல்கள் சரியாக பரிமாறிக்கொள்ளப்படாமல், மனநோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.
  • மரபியல்: பரம்பரையாக தோன்றுவதால், குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மனநோய் இருந்தால், பிறருக்கும் அது வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இத்தகைய பாதிப்பு, மரபணுக்கள் மூலமாக சந்ததிகளுக்கிடையே கடத்தப்படுவதால் இவ்வாறு உண்டாகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட மரபணுக்களில் கோளாறுகள் இருந்தால், மனநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். எனவேதான், பரம்பரையாக அத்தகைய மரபணுக்களை ஒருவர் பெற்றிருந்தாலும், அவர் மனநோய் இல்லாமலும் இருக்கக்கூடும். பல மரபணுக்களின் கூட்டுச் செயல்பாடுகளோடு, மனஅழுத்தம், துக்க நிகழ்வுகளின் தாக்கம் ஆகிய பிற காரணிகள் இணையும் போது, அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ள நபர் இந்நோயால் தாக்கப்படுகிறார்.
  • நோய்தொற்றுகள்: சிலவகை நோய்தொற்றுகள், மூளையில் பாதுப்புகள் எற்படுத்துவதால் மனநோய்கள் ஏற்படலாம் அல்லது அதிகரிக்கப்படலாம். உதாரணமாக, ஸ்ட்ரோகாக்கஸ் பாக்டீரியா (Streptococcus bacteria) தொற்றுக்கும், பீடியாட்ரிக் ஆட்டோஇம்யூன் ந்யூரோ சைக்கியாட்ரிக் டிஸார்டர் (pediatric autoimmune neuropsychiatric disorder - PANDA) என்ற நிலைக்கும் தொடர்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளிடையே, அப்ஸஸிவ் கம்பல்சிவ் டிஸார்டர் (obsessive-compulsive disorder) மற்றும் பிற மனநோய்கள் ஏற்படக்கூடும்.
  • மூளை பாதிப்புகள் அல்லது காயங்கள்: மூளை பாதிப்புகள் அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் காயங்களால், சில வகை மனநோய்கள் ஏற்படுகின்றன.
தேசிய மனநலக் கொள்கைகள் (National mental health policies), மனநலக்குறைபாடுகள் பற்றி மட்டுமல்லாமல், அவை ஏற்படக் காரணமாக உள்ள பல விரிவான விஷயங்களையும் உணர்ந்து, அவற்றை தீர்க்கும் முயற்சிகளை செய்யவேண்டும். மனநலம் பற்றிய கருத்துக்களை சுகாதாரம் மட்டுமன்றி, கல்வி, வேலைவாய்ப்பு, நீதி, போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு ஆகிய அரசு மற்றும் தனியார்த் துறைகளின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் நடவடிக்கைக?
மனநல மேம்பாடு தொடர்பான நோக்கங்களை வலுப்படுத்துவதற்கு, அரசுகளுக்கு WHO ஆதரவு அளிக்கிறது. மனநலம் தொடர்பான திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் இதை ஒருங்கிணைத்தல், அவற்றை பரவலாக்குதல், திட்டமிடுதல் ஆகியவற்றுக்காக அரசுகளுடன் இணைந்து செயல்படுகிறது. குழந்தைகள் மத்தியில் இந்நோயை முன்னரே கண்டறியும் நடவடிக்கைகளுக்கு (உதாரணமாக கர்ப்பிணிகளை இல்லத்திலேயே சந்தித்தல், பள்ளி செல்லும் முன்பான விளையாட்டு நிகழ்ச்சிகள், வசதியற்ற ஏழைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் மனநல திட்டங்கள்) ஆதரவளிக்கப்படுகிறது.
  • குழந்தைகளுக்கான திட்டங்கள் (உதாரணமாக, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள். குழந்தைகள் மற்றும் இளையோருக்கான மேம்பாட்டுத் திட்டங்கள்)
  • பெண்களின் சமூக பொருளாதார வளர்ச்சி (உதாரணமாக, கல்வி மற்றும் நுண்கடன் திட்டங்களை எளிதில் அணுக உதவுதல்)
  • வயதில் மூத்தோருக்கான ஆதரவுத் திட்டங்கள் (உதாரணமாக, தோழமை முயற்சிகள், மூத்தோர் மையங்கள்)
  • சிறுபான்மையினர், பழங்குடியினர், இடம்பெயர்ந்தோர், பேரிடர்கள் மற்றும் சண்டைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான திட்டங்கள் (உதாரணமாக, பேரிடர்களுக்கு பிறகு வழங்கப்படும் மனநல ஆலோசனைகள்)
  • பள்ளிகளில் மனநலன் மேம்பாட்டு திட்டங்கள் (உதாரணமாக, பள்ளிகளில் சூழல் மேம்பாடு, குழந்தைகள் தோழமை கொண்ட பள்ளிகள்)
  • பணிச்சூழலில் மனநலன் சார்ந்த நடவடிக்கைகள் (உதாரணமாக, மன அழுத்தம் குறைக்கும் நடவடிக்கைகள்)
  • வன்முறை தடுப்புத் திட்டங்கள் (உதாரணமாக, சமுதாயக் காவல் திட்டங்கள்), சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் (உதாரணமாக, ஒருங்கிணைந்த ஊரக மேம்பாட்டுத் திட்டங்கள்)






==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்